Pages

Tuesday, January 10, 2012

புயல் நல்லது - மொக்கை பதிவு


என்னுடைய---இன்றைய மற்றும் ஒரு பதிவு....


செல்ல இங்கு கிளிக் பண்ணவும்....


அன்பர்களே.....

மிகுந்த சிரமத்துக்கு இடையில் நேற்று மாலை மின்சாரம். ஒரு வழியாக கிடைக்க பெற்றேன். கற்காலத்தில் இருந்த என்னை, அன்புடன் தொலைபேசி மற்றும் மெயில் முலமாக விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. பெயர்  குறிப்பிட்டு சொன்னால் அதுவே ஒரு நீண்ட பதிவாகிவிடும்.

உண்மைதாங்க இந்த பதிவுலகத்தில் என்னை விசாரிக்க இவ்வளவு நண்பர்களா....???

அப்படி நான் என்ன கிழித்துவிட்டேன். ஒன்றுமே இல்லை.என்னினும் உங்கள் அன்பு என்னை கண் கலங்க வைத்தது உண்மை.மீண்டும் மீண்டும் மீண்டும் என் மேல் அன்பு கொண்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி.....நன்றி ...நன்றி...!!!!!!

நாம வழக்கம் போல் மொக்கை என்னும் படு மோசமான பதிவுக்கு செல்வோமா ???

நான் ஆரம்பித்திலேயே சொல்லிடறேன்...இந்த பதிவு யாரையும் மனசில் வைத்து எழுதபடலை.நான் யாரையும் நக்கல்,கிண்டல் பண்ணவும் இல்லை.
சும்மா ஜாலி-யா எழுத நினைத்து எழுதுகிறேன். இது சத்தியம். சத்தியம். சத்தியம்.

நாட்டுல எவ்வளவோ பிரச்சனைங்க, அதுல பாருங்க.

1) யாருக்கும் முச்சு விட சுத்தமான காத்தே கிடைக்கலை. இதுக்குதாங்க இயற்கைக்கு ரோம்ப கவலை வந்துடுச்சு. உடனே யோசித்து ( ரூம் போட்டு ) கடல்-ல உள்ள நல்ல சுத்தமான காற்றை எங்களை மாதிரி ரோம்ப புண்ணியம் செஞ்சவங்க இருக்குற இடத்துக்கு கொடுத்துச்சி.

2) அடுத்து அவன்னவன் இந்த ஈர்ஏழு உலகத்திலும் இல்லாத விலை மதிப்பற்ற(!!!)அரிசியை தின்னுட்டு பெருசு கொடுத்த டி.வி-ல படம்,சீரியல் பார்த்துக்கிட்டு உடல் உழைப்பு இல்லாமல் சும்மாவே இருக்கானுக. இதுக்கு தாங்க தானே புயல் வைச்சுது ஆப்பு. இப்ப பாருங்க குடிதண்ணிக்கே எப்படி அலையுரனுக. இதுக்கே இப்படினா "அதுக்கு" தண்ணிக்கு எவ்வளவு அலையனும் ???

3) அப்புறம் இந்த கர்போன் ரேட்டிங்காம் இல்ல. இது எவ்வளவு பசுமையா இருக்கோ அந்த அளவுக்கு ஏதோ POINTS,காசம்ல. இதை வச்சி பெரிய ஆட்கள் எல்லாம் நிறைய சம்பாதிக்கிறாங்களாம். அதான் மத்தவங்களோட பசுமையில் அவன் என்ன காசு பாக்குறது. புடுங்கி எறி எல்லாத்தையும்-னு புயல் புடுங்கி போட்டுடுச்சி.

4) பெண்கள்--நவீன சமையல் இயந்திரத்தால--எந்த வித உடல் சார்ந்த உழைப்பும் இல்லாம உடம்பை கெடுத்துக்கிட்டு..நிறைய மருத்துவத்துக்கு செலவு பண்றாங்களாம். நம்ம பாண்டி,,கடலூர் மாவட்ட பெண்கள் மேல் எவ்வளவு அக்கறை இந்த புயலுக்கு....பாருங்க...எல்லா பெண்களையும் உடல் சார்ந்த வேலை செய்ய வைத்து மருத்துவ செலவை மிச்சம் பண்ணி இருக்கு....

5) இந்த கற்காலம் கற்காலம்னு இந்த பள்ளிக்கூடத்து பசங்க வரலாற்றுல
படிச்சி மறந்துடுதுங்க. வரலாறு மிக முக்கியம். அதை மாணவர்கள் மறக்கலாமா??? அதான் எல்லா மாணவர்களையும் கற்காலத்துக்கு தானே புயல் அழைத்து சென்றது...இனி மாணவர்கள் வரலாற்றை மறப்பார்களா ???

6) ஏற்கெனவே இன்னொரு பதிவு போட்டுவிட்டதால் மிக நீண்ட இரண்டு பதிவுகளை படிக்க உங்களுக்கு மிகுந்த ஆயாசமாக இருக்கும் என்பதால். இரண்டுக்கும் கமெண்ட் போடவேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருப்பதால். இந்த மாதிரி, இந்த மாதிரி-னு நீங்களே யோசித்து நிறைய POINTS FILL UP பண்ணிக்குங்க. நான் மேலும் இரண்டு பாயிண்ட் சொல்லிட்டு இந்த பதிவை முடிச்சுக்கிறேன்.

பாயிண்ட் நெம்பர் இல்லை. ஏன்னா நீங்க ரோம்ப புத்திசாலி.எத்தனை பாயிண்ட் யோசிப்பீங்கன்னு கணக்கே இல்லை.பெரிய ஐயா,,சின்ன ஐயா-னு இரண்டு பேர் இருக்காங்க. இவங்களுக்கு ஒரு கட்சி இருந்துச்சி (!)  அந்த கட்சிக்கு "மரம்வெட்டி கட்சி"-னு பேர் இருந்துச்சி. நம்மளைவிட யாருயா அம்மாம் பெரிய அப்பாடக்கர்னு இயற்கைக்கு வந்துச்சி பாருங்க கோபபபபபம்.

எல்லா மரம்,,மின்சார கம்பம்--எல்லாத்தையும் புடுங்கி போட்டுடுச்சி. இனி யாரவது அந்த கட்சியை மரம்வெட்டி கட்சி-னு சொல்லுவீங்க?????

அப்புறம் பசுமை புரட்சினு எல்லா பெருசு, சிறுசு, காவி வெட்டி கட்டுனவங்க,இன்னும் இன்னிக்கு முளைத்த காளான்கள் எல்லாம் மர கன்றுகளை கைல வச்சிக்கிட்டு நட இடம் இல்லாம லோலோ-னு அலையுறாங்க. அந்த மர கன்றுகள் எல்லாம் காஞ்சி செத்துபோரத பார்த்த
இயற்கை. அவற்றை நட இடம் பார்த்து கொடுத்துருக்கு.

அடுத்து ...

இந்த நாய் நக்ஸ்னு ஒருத்தன் இருக்கான்யா.பதிவுன்னு போட்டு கொலையா கொல்லுரான்யா.அப்படின்னு நீங்க புலம்புன புலம்பல் இயற்கைக்கு கேட்டுடுச்சி. அதான் பாருங்க. என்னை மட்டும் தாக்கவேண்டிய புயல் அது முடியாம, என் மேல் உள்ள கோபத்தை காட்ட ( நான் ரொம்ப நல்லவன், சத்தியவான், உத்தமன் இன்னும் என்னன்னவோ.... )

நான் இருக்கும் மாவட்டத்தையே காலி பண்ணிடுச்சி.....


நீதி :-நல்லவர்களை அழிக்க நினைத்தால் உலகம் அழியும்.....


அனைவருக்கும் ....

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் தின சிறப்பு வாழ்த்துக்கள்.....

27 comments:

Anonymous said...

/// அப்படி நான் என்ன கிழித்துவிட்டேன்....
ஒன்றுமே இல்லை...என்னினும் உங்கள் அன்பு என்னை கண் கலங்க
வைத்தது உண்மை.... ///

யோவ் அழுவாதய்யா, சாரி வீட்ல வெங்காயம் வெட்டிக்கிட்டு இருந்தீங்களா கவனிக்கலீங்னா.

Anonymous said...

/// இதுக்குதாங்க இயற்கைக்கு ரோம்ப கவலை வந்துடுச்சு ....
உடனே யோசித்து ( ரூம் போட்டு ) ///

சரக்கு சோடா ஊத்தியா இல்ல வழக்கம் போல ராவாவா

Unknown said...

சார் இயற்க்கை மிக வித்தியாசமானது...அப்பகுதி மக்கள் மீண்டும் விரைவில் பழய படி வாழ்க்கை திரும்ப இறைவனை வேண்டுகிறேன்!

Anonymous said...

/// ஏற்கெனவே இன்னொரு பதிவு போட்டுவிட்டதால் மிக நீண்ட இரண்டு
பதிவுகளை படிக்க உங்களுக்கு மிகுந்த ஆயாசமாக இருக்கும் என்பதால்...
இரண்டுக்கும் கமெண்ட் போடவேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருப்பதால்.... ///

இவரு பெரிய உ.தா 25 பக்கத்து அடிச்சி கிழிச்சிட்டாரு. 30 போட்டோவ போட்டுபுட்டு நாலு வார்த்தைக்கு ஒரு என்டர் தட்டிபுட்டு பாராவுக்கு பாரா இடைவெளி விட்டா அதுக்கு பேரு பெரிய பதிவா.

அதுமட்டுமில்லாமல் உங்களை கலாய்த்து பின்னூட்டமிடும் போது கிடைக்கும் சந்தோஷம் இருக்கே, அது இரண்டு புல் அடிச்சாலும் கிடைக்காதுங்க.

Anonymous said...

/// பாயிண்ட் NO இல்லை :-- ஏன்னா நீங்க ரோம்ப புத்திசாலி...
எத்தனை பாயிண்ட் யோசிப்பீங்கன்னு கணக்கே இல்லை... ///

அப்படில்லாம் குருட்டாம்போக்குல பொய் சொல்லக்கூடாது தலைவரே. உங்க கூட பழகினதுக்கு அப்புறம் எங்களையெல்லாம் புத்திசாலினு சொன்னா எப்படி?

Unknown said...

பசுமை புரட்சி,மரம் வெட்டி கட்சின்னு அரசியல் பேசுறீரு.....செம நக்கல்யா உனக்கு...பார்த்துங்க தலை ஆப்பு வெச்சற போறாங்க....

Anonymous said...

/// இந்த நாய் நக்ஸ்-னு ஒருத்தன் இருக்கான்யா....பதிவுன்னு போட்டு
கொலையா கொல்லுரான்யா...அப்படின்னு நீங்க புலம்புன புலம்பல் ///

அண்ணே இந்த உண்மை உங்களுக்கும் தெரியுமா.

Anonymous said...

/// என்னை மட்டும் தாக்கவேண்டிய புயல்----
அது முடியாம,,,என் மேல் உள்ள கோபத்தை காட்ட----
( நான் ரோம்ப நல்லவன்,,,சத்தியவான்,,,உத்தமன் இன்னும் என்னன்னவோ.... )
நான் இருக்கும் மாவட்டத்தையே காலி பண்ணிடுச்சி..... ///

இப்படில்லாம் படக்குன்னு உண்மைய சொன்னா நாளைக்கு ரோட்டுல போறப்ப சின்ன குழந்தை கூட கல்லெடுத்து அடிக்கும் தலைவரே.

Anonymous said...

/// இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் தின சிறப்பு வாழ்த்துக்கள்..... ///

இந்த கட்டுரையிலேயே மனதை தொட்ட வரிகள் இது மட்டும் தான்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தலைவரே.

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் இதுல அரசியல் வேற....? உங்களுக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

பார்ரா.... அண்ணே, அரசியல் பத்தியெல்லாம் பேசுறாரு...
ஒருவேளை புயலால இப்படி பேசுறாரோ?

Madhavan Srinivasagopalan said...

// டிராப்ட்-ல எல்லாம் சரியா இருக்கு ...ஆனா பப்ளிஷ் பண்ணா
வேற மாதிரி மாறிடுது ....எப்படின்னு தெரியலை.... //

சார்.. சார்..
நல்லா பாருங்க.. அது வேற யாரோட டாஷ்போர்டா இருக்கப் போகுது..

ரஹீம் கஸ்ஸாலி said...

தானே புயலிலிருந்து தானே மீண்ட தானை தலைவன் வாழ்க

cheena (சீனா) said...

அன்பின் நக்கீரன் - தாங்க இயலாத துயரத்திலும் மொக்கைப்பதிவு - மன நிலை - மகிழ்ச்சி - துனப்த்திலும் இயல்பாக இன்பம் காணும் மனம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

Mohamed Faaique said...

///
அதான் பாருங்க...என்னை மட்டும் தாக்கவேண்டிய புயல்----
அது முடியாம,,,என் மேல் உள்ள கோபத்தை காட்ட----
( நான் ரோம்ப நல்லவன்,,,சத்தியவான்,,,உத்தமன் இன்னும் என்னன்னவோ.... )
நான் இருக்கும் மாவட்டத்தையே காலி பண்ணிடுச்சி.....///

உங்களுக்கு புயல் போதாது, சுனாமியோட சேர்த்து சுறாவும் வரனும்... ஹி...ஹி...
(எவ்ளோ கோவத்தோட திட்டினாலும் கடைசில ஒரு “ஹி..ஹி’’” போட்டா ச்சும்மா லொல லொல’னு அர்த்தமாம்..)

உணவு உலகம் said...

இயற்கையின் சீற்றத்திலிருந்து மீண்டு வந்ததற்கு இறைவனுக்கு நன்றி. லொள்ளு மட்டும் இன்னும் குறையவேயில்ல.

ராஜி said...

நீதி :-நல்லவர்களை அழிக்க நினைத்தால் உலகம் அழியும்.....
>>
னிச்சயம் உங்க பிளாக்குல எதோ வைரஸ் இருக்கு அண்ணே

ஹாலிவுட்ரசிகன் said...

முடியல ....

rajamelaiyur said...

//இரண்டுக்கும் கமெண்ட் போடவேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருப்பதால். இந்த மாதிரி, இந்த மாதிரி-னு நீங்களே யோசித்து நிறைய POINTS FILL UP பண்ணிக்குங்க.
//
உங்க ஆசைப்படி கமெண்ட் போட்டாச்சு

MaduraiGovindaraj said...

///இந்த நாய் நக்ஸ்னு ஒருத்தன் இருக்கான்யா.பதிவுன்னு போட்டு கொலையா கொல்லுரான்யா.அப்படின்னு நீங்க புலம்புன புலம்பல் இயற்கைக்கு கேட்டுடுச்சி.////
எதுக்கு இப்படியெல்லாம் பேசப்பிடாது
கடவுள் காப்பார்

MaduraiGovindaraj said...

ஜனவரி 15ம் தேதி : கொண்டாடுவோம் பென்னிகுக் பிறந்த நாளை !

Unknown said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

பாவம் புயல்.. ஹிஹி.. எப்பிடி சுகம்..

நண்பன்- வித்தியாசமான விமர்சனம்.

Unknown said...

soper

MANO நாஞ்சில் மனோ said...

கடலூர் மக்கள் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் துன்பமில்லாமல் வாழவேண்டும்....

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் அண்ணே நடுராத்திரி போன் பண்ணி பிரபல பதிவர்களை அலறி ஓடச்செய்வது என்ன நியாயம் ஹி ஹி...!!!