Pages

Sunday, September 8, 2013

"இதை" படித்தால் உங்களுக்கு "அது" வரும்...{பெண்கள் தவிர்க்கவும்.}

வணக்கம் அன்பர்களே...!!!


என்னாடா "இது" தலைப்பு . நீயும் இப்படி வைக்க ஆரம்பித்துவிட்டாயே என்று கேக்குறீங்களா??? பதிவ படிச்சிபாருங்க மக்களே...கண்டிப்பா உங்களுக்கு "அது" வரும்...[பெண்கள் தவிர்க்கவும்.]


கடந்த சில வாரங்களுக்கு முன் ஏதோ சந்திப்பு நடக்க இருப்பதாக அறிவிப்புகள் வந்தது....சில நல்ல உள்ளங்களின் மூலமாக அந்த சந்திப்பு
தமிழ் பதிவர்களிடையே செப்.1 அன்று நடந்தது... மற்ற மொழி பதிவர்கள் "அதை" நடத்தவில்லை.

நானும் சந்திப்பில் கலந்து கொள்ளவேண்டும் என்று ஆப்பிரிக்கா,,அண்டார்ட்டிக்கா எல்லாம் போய் பார்த்துட்டேன்..கொய்யால...
எவனுமே என்னை கண்டுக்கல...

சரி "அதுக்கு" என்ன என்று நீங்கள் கேக்கலாம்....???

ஒண்ணுமில்லை...ஆப்பிரிக்காவில் எல்லாரும் அமெரிக்காவில் உள்ளது போல் வாழ்கிறார்கள்...அண்டார்ட்டிக்காவில் வாழ்பவர்களுக்கு ஏசி வசதி செய்யவில்லை என்றால் அவர்கள் உயிர் வாழ்வது கடினம் என்று பொய்யான கருத்தை என்னுடைய உண்மையான  கரூத்தாக வெளி இட்டேன்.....

அட கருமமே...நக்ஸ்...இந்த ஸ்பூப் எழவு எல்லாம் அப்புறம் வைத்துக்கொள்...
முதல்ல "இதை",,,"அது".....என்ன???

பொறுங்க மக்காஸ்... ""கவிதையா""சொல்லாம போய்டுவேனா ???அதாவுதுங்க....

நான் ஒரு விருந்தினர் வீட்டுக்கு போனேனுங்க....


செம கவனிப்புங்க....வரவேற்புல இருந்து...அனைத்திலும்...அவங்க செம டாப்புங்க......எங்களை கவனிக்குற விஷயத்துல அவங்க ரோம்ப சிரத்தை எடுத்துக்கிட்டதால கொஞ்சம் ஓவர் லோட் அவங்களுக்கு ஆகிடுச்சி...அவங்களும் என்ன பண்ணுவாங்க பாவம்...???பத்து ஆள் செய்யுற வேலையை ஒருத்தரே செய்தா???



நான் வேடிக்கை பார்க்க மட்டும்தாங்க போனேன்...எவன் எப்படி செத்தா எனக்கு என்னங்க,...எனக்கு சரோஜா தேவி புக் உடனே பல லட்சம் காப்பி பல மொழில அடிக்க வேண்டி இருந்ததால...எனக்கு என் வேலை முக்கியம்...லாபம் முக்கியம்...அடிக்குற இடத்தை நான் போட்டால் கம்பி என்ன வேண்டி இருக்கும் என்பதால்...நான்...எதையும் "வீதி"யில காட்டிக்க மாட்டேன்...

போய்...செம கட்டு கட்டுனேங்க...ரோம்ப அதிகமா...பத்து ஆள் சாப்பிடுரத்தை...
நான் மட்டுமே சாப்பிட்டதால்....










































































எனக்கு "அது"வர ஆரம்பிச்சிடுத்து.......



""எதுவா""...???


""அதாங்க"".......



மஞ்ச கலருல முக்குவோமே........



உடனே நான் என்ன பண்ணேன் தெரியுமாங்க......????





































சாப்பிட தட்டுல ""அதை""  செஞ்சுட்டேங்க....

அதாங்க.....பே_____________ன்

இதுக்காக உலகத்தின் அத்தனை பேரிடம் இருந்து மிரட்டல் வர ஆரம்பிச்சிட்டுதுங்க....

இதுக்கு நான் என்னங்க பண்ண முடியும்...????


சாப்பிட்ட தட்டுல................... ......................பே_____ ...குத்தமாங்க....???

இதை பெரிய குத்தமா எடுத்துக்கிட்டு.....என்னை கொலை வெறில தாக்குறாங்க...


இந்த கூத்துல பாருங்க,,,....பெ_...........பதிவர்களை நான் அசிங்க படுத்திட்டேனாம்......நான் என்னாங்க செய்யுறது???

எனக்கு ஒரு நாளைக்கு தட்டுல விழுற பீஸ் முக்கியம்......
அதே மாதிரி ...பே____ தும்....

தாகத்துக்கு தண்ணி,,,சோத்துக்கு தண்ணி கொடுத்தாங்க தான் ...








ஆனா......







"அதுக்கு"...........................................................தண்ணி...கொடுக்கலையே.....!!!!!!!!!



















யோவ்வ்வ்வ்வ்வ் நக்ஸ்......."அது" வரும்-ன்னு சொன்னியே வரலையே.....???











வரலியா.......அப்ப....இங்க போய் இந்த இரண்டு பதிவையும் படிங்க....












அப்படியும் வரல என்றால்.....மிக கடுமையான மசாலாக்கள் எல்லாம்சாப்பிட்டுவிட்டு.....தெருவில ஒரு பாட்டு ரசிகன்....பாடிக்கிட்டு போவான்...அதை கேளும்....தானா




















"வாந்தி"










வரும்.....

















இன்னும் வரும்,.....




பாட்டாலே புத்தி சொன்னாய்....பாட்டு ரசிகனாய்......






(அன்பர்களே..கொஞ்சம் சிரமம் பாராமல் திரட்டிகளில் இணைக்கவும்...இணைப்பவரூக்கு...நன்றியோ நன்றி...)







டிஸ்கி 1:-- பே_________ன் ........அப்படின்னா...என் தலைல இருந்த பேன் பார்த்து...தட்டுல விட்டுடேன்..{சத்தியமா நம்புங்க மக்கா...அதான் உ(பொ )(ன்)(ய்) (மை)யான}.....எண்ணம்....


டிஸ்கி 2 :-  கலருல எல்லாம் லிங்க் இருக்காது......பிம்பிளிக்கா...பிளாப்பி...




Thursday, September 5, 2013

சத்தியமா சவுந்தருக்கு பதில் பதிவு...{18+}

வணக்கம் அன்பர்களே...!!!

திரு சவுந்தர் அவர்கள் கேனத்தனமாக...ஏதோ உளறி இருக்கார்...
லிங்க் கொடுக்க நான் என்ன முட்டாளா??...ஹிட்ஸ் வெறி பிடித்து அலையும்
இந்த மாதிரி வாத்தியார்,,,காக்கி சட்டை மனிதர் எல்லாம் தூக்கில் தொங்கவிட வேண்டியவர்களே.....

அவரிடம் நான் கேட்ட ஒரே கேள்வி...உமக்கு இது தேவையா என்று தான்...???

நீ வேண்டுமானால் பதில் பதிவு போட்டுக்கொள் என்றார்....
{கவனிக்கவும்....மரியாதையாம்...}

நான் பேசிய நேரம்...04/09/2013----11.00.pm---1.24..secs....at 9042235550...இந்த நம்பர்...
அவர் பதிவில் உள்ளது,,,..

இதே மாதிரி நம்ம பதிவர் உலகத்தில் ஒருவர் இருந்தார்....
அவரை நான்தான் வரகூடாது என்றேன்....

ஏன் எனில் காபி பேஸ்ட் பன்னுறவன் எல்லாம் என்னை பொருத்தவரை....
கூட்டி கொடுப்பவன்.....{மன்னிக்கவும்..அன்பர்களே...உண்மையை மட்டும் சொல்லுகிறேன்.}

இதே...தரம் தாழ்ந்தவன் புரட்சிக்காரனிடம் எவ்வளவு செருப்படி வாங்கினான்....???

யோவ்வ்வ்வ்...புரட்சிக்காரா.....என்கையா போன....???

இந்த கேள்வி உங்கள்  எல்லாருக்கும் தோணும்......

அட முட்டாள் பதிவர்களே......

அவனேதான்யா எல்லாமும்....

இந்த விஷயத்தில் நான் கூட ஏமாந்து....இவனுக்கு ஆதரவா இருந்திக்கேன் என்று வெக்க படுகிறேன்...

இனி அவனை மறுக்க சொல்லுங்கள் பார்க்கலாம்...???

அப்படி மறுத்தால் {ஆதாரத்துடன்}நான் இந்த பதிவுலகத்தை விட்டே போகிறேன்....

மிஸ்டர்...நிருபன்....இந்த நேரம் உங்களுக்கான...நேரம்....

இந்த பதிவுக்கு மட்டும் கமெண்ட் மாடுறேஷன் வைக்க படுகிறது...
நாளை மாலை....ஆறு மணிக்கு அனைத்து பின்னஊட்டங்களும் ....நீக்காமல் பிரசுரிக்கப்படும்...

நான்...ஹிட்ஸ்-க்கு அலைபவன்....இல்லை...நான் தமிழ் மனத்தில் இல்லை...

பின்னூட்ட தடை.....இந்த மாதிரி,...முட்டாள் வாத்தியார்-க்கு மட்டுமே...என் இணைய வாழ்வில் இது முதல் முறை....

மிஸ்டர் சவுந்தர்....உமக்கான...நேரடி....பதிவு இது....தில் இருந்தா...என்னிடம் மட்டும் மோதவும்....

உமக்கான அஸ்தமனம்...ஆரம்பித்துவிட்டது.....
ஆனால் இனி எங்கும் வந்து எமக்கு மட்டும் பதில் சொல்லும் திறமை இருந்தால்...வாரும்.....

இல்லாவிட்டால்....

யாரோடைய குழந்தைக்கு அப்பனா இரும்.......நான் எங்கும் ஓடி ஒழிய மாட்டேன்....

வேண்டுமானால் அனைத்து ஸ்கிரீன் ஷாட் எடுத்த்துக்கொள்ளலாம்...

ஆனால்....என்னை பொறுத்தவரையில்...என் சொந்த குழந்தைகளுக்கு,,,மற்றும்....நான் தத்தெடுத்து வளக்கும் குழந்தைகளுக்கு மட்டும் அப்பனாக...என் இனிஷியல் இருக்க வேண்டும் என்று விருப்பபடுகிறேன்...


அன்பர்களே....பொன்குரவங்க...நாளை மாலை வரை....பின்நூட்டத்திர்காக காத்திருக்கவும்...இது அவசர பதிவு...சோ...எழுத்து பிழிகள்...அனைத்தும் இருக்கும்....பதிவை நான் மீண்டும் படித்து...பார்க்காமள்ளே பப்ளிஷ் செய்கிறேன்....மன்னிக்கவும் தமிழ் ஆர்வலர்களே.....

வாருங்கள்....இனி சவுந்தர் மட்டுமே இப்போதைக்கு கலாய்க்க பட வேண்டியவர் என்பதால்....விருப்பம் உள்ளவர்கள் மட்டும்...ஒன்று கூடுவோம்....

துரோகிகளை விரட்டி அடிப்போம்.....




அன்பர்களே...பின்னூட்டம் விஷயமாக....எனது நண்பர்களிடம் பேசி விட்டு .....
பிரசுரிக்க ஏற்ப்பாடு செய்ய முயச்சிக்கிறேன்...நான் மாலை வரை அலுவலகத்தில் இருப்பதால்....

திரு...சவுந்தர் அவர்களே....நாளை காலை...9 மணிக்கு என் பதிவை...உங்களுக்கு போன் மூலம் தெரிவிக்கிறேன்....

யாரும் சொல்ல வில்லை என்று நீங்கள் நழுவக்கூடாது என்பதால்....

இனி நீயா.....நானா....???

நான் என் அப்பனுக்கு தான் பிறந்திருக்கிறேன்....

வாடிவா....ரோம்பநாள்ஆச்சி....நேரடியா........விளையாடி...விளையாடுவோம்....எப்போதும்....நான் மட்டுமே ஜெயிக்குற விளையாட்டு இது....!!!


அன்பர்களே தயவு செய்து இந்த பதிவை திரட்டிகளில் இணைக்க வேண்டாம்...
எங்கும்...லிங்க் பகிர வேண்டாம்...நான்...ஜெனுன் மனிதன்...

LET AS SEE......

கலவானியா,,,{அதே போல் செயின் திருடன்}-ஆ.....-----அல்லது....நானா என்று...

Tuesday, September 3, 2013

பிரியாணினா சைதை அஜிஸ் வீட்டு பிரியாணிதான்.வாழ்நாளில் சாப்பிட்ட NO1.பிரியாணி.

வணக்கம் அன்பர்களே....

கடந்த சனி அன்று பதிவர் சந்திப்புக்கு செல்ல உறுதியானதும்...
புதன் அன்று நமது சக பதிவர் சைதை அஜிஸ் அவர்களை தொடர்புகொண்டேன்.

"ஐயா...தல...பதிவர் சந்திப்புக்கு சனி அன்றே வந்துவிடுவேன்..."

"ஆஹா...பேஷ்..பேஷ்..வாங்க...கலக்குவோம்..."

ஒரு சின்ன இடைசொறுகல் .....

நானும் வீடு,,,கடை,,மற்றும் நண்பர்கள் வீட்டில் பிரியாணி சாப்பிட்டிருக்கேன்.
அப்போது எல்லாம்...நமக்கு பீஸ் மத்தவங்களைவிட அதிகமாக வைக்கிராங்களா என்றுதான் பார்ப்பேன்...நமக்கு பீஸ் முக்கியம்...

ஆனா பாருங்க....நான் பதிவர் (???!!!) ஆனதும்...நம்ம தல Cable சங்கர்
சாப்பாட்டு கடை-ல் பிரியாணிகளை பத்தி சிலாகிச்சி,சேர்க்கை பொருட்களை
பத்தி பிரிச்சி மேய்ந்து எழுதுவார்...அதை படிக்கும்போதே அந்த பிரியாணியை
நாம் சாப்பிட்ட உணர்வு வரும்....

சரி இவர்தான் இப்படி எழுதுகிறார் என்று பார்த்தா...நம்ம எவர் கிரீன் சூப்பர் ஸ்டார் பதிவர் அபி அப்பா அவர் பதிவுகள்ல பாய் வீட்டு பிரியாணியை
படிக்கிற நமக்கு நாக்குல நீர் ஊருகிரமாதிரி அப்படி சிலாகிச்சி எழுதி இருப்பார்.....

இது போக பல நண்பர்கள் பாய் வீட்டு பிரியாணியை உச்சத்தில் தூக்கி வைத்து இணையத்தில் எழுதி இருக்கிறார்கள்...என்ன தான் பாய் கடை பிரியாணியா இருந்தாலும்...அவர்கள் வீட்டில் செய்யும் பிரியாணியே உலகின் உச்சகட்ட சுவை என்று......நமக்கு அப்படி ஒரு சுவை கொண்ட பிரியாணி கிடைக்காதா என்று பல நாள் நான் ஏங்கியது உண்டு...


""அஜிஸ் சார்...ஒரு சின்ன ஆசை...வெக்கத்தை விட்டு கேக்குறேன்.....
உங்களுக்கோ  அல்லது தங்கள் வீட்டு என் சகோதரிகளுக்கோ ...சிரமம் தருகிறேன் என்று என்ன வேண்டாம்...எனக்கு நெடு நாளாக ஒரு ஆசை...""



"பரவாஇல்லை..சொல்லுங்க...நக்ஸ்."


"இல்லை...என்னாடா இவன் இப்படி ஒரு கேவலமான மனிதனா இருக்கான் என்று நினைக்ககூடாது""

""ச்சே..ச்சே...அதெல்லாம் நான் ஒன்றும் நான் நினைக்க மாட்டேன்.நீங்க சொல்லுங்க...""

""பாய் வீட்டு பிரியாணி வேணும்...கடைல வாங்காம...வீட்டுல செய்தது கிடைக்குமா??? அதை சாப்பிட்டால் நான் ஜென்ம சாபல்யம் அடந்துவிடுவேன்...""

""இவ்வளவுதானா..?? நான் ஏற்ப்பாடு செய்கிறேன்...இதுக்கா இவ்வளவு பீடிகை??...கண்டிப்பா வீட்டுல செய்து எடுத்து வருகிறேன்...எத்தனை பேருக்கு வேணும்..??""


நான் அதிகம் தொந்தரவு கொடுக்க விரும்பாமல்..""ஒரு ஐந்து பேருக்கு போதும் தல...""


""ஓகே...ஓகே...சனியன்று மதியம் 1 மணிக்கு பிரியாணியுடன் சந்திக்கிறேன்...""

""நன்றி பாஸ்""


""நன்றி..""

புதன்,,வியாழன்,,வெள்ளி மூணு நாளும் 24 மணிநேரமும் பிரியாணி நினைவாகவே இருந்தேன்...வெள்ளி அன்று ---சனிக்கிழமையே வந்து சேரும் பதிவர்களுக்கு ஒரு சிலரிடம் தகவலை சொன்னேன்...நிறைய பேரிடம் சொன்னால் எனக்கு கிடைக்காம போயிடுமோ என்ற சுயநலம்...

மந்திரம் ஓதுவதை போல பாய் வீட்டு பிரியாணி,,பிரியாணி என்று சொல்லி கொண்டே இருந்தேன்....

சனி அன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி பன்னிரண்டு மணிவாக்கில் லாட்ஜ்-ஐ கோகுல் உடன் சென்று அடைந்தேன்...ஆரூர் மூனா செந்தில்,மற்றும் மற்ற நண்பர்களுடன்  மாஹா தியானத்தில் அடைக்கலம் ஆக முயற்சித்துக்கொண்டிருக்கும்போது சைதை அஜிஸ் அவர்கள் போன் செய்தார்...ஒரு பத்து பேருக்கு பிரியாணியுடன் வீட்டை விட்டு கிளம்பி விட்டதாக....

பத்து பேருக்கா....ஆஹா...இன்னிக்கு செம வேட்டைதான்....அப்புறம் என்ன மகா தியானத்தை கொஞ்சநேரம் ஒத்தி போட்டுவிட்டு...இந்த பிரியாணி தியானத்தை தொடர்ந்தது பிறகு மலை ஏறி கொள்வோம் என்று ஒரு மனதாக முடிவு செய்தோம்....

மீண்டும் ஒரு சின்ன இடை சொறுகல் ....

எனக்கு கடந்த ஐந்து வருடங்களாக...மசாலா போட்டு சமைத்த பொருட்கள் செரிக்காமல்...ரொம்ப தொந்தரவு பண்ணும்...இரண்டு சோடா குடித்தால்தான் வயிறு ப்ரீ ஆகி மதமதப்பு குறையும்....

நாங்கள் வழி மேல் விழி வைத்து காத்திருந்த பிரியாணி வந்தே விட்டது...
அஜிஸ் பத்து பேருக்கு என்று சொல்லி விட்டு எடுத்துட்டு வந்தார் பாருங்க ஒரு பெரிய பாத்திரத்தில்...எப்படியும் இருபது பேருக்கு மேல் சாப்பிடலாம்...கூடவே...வெங்காய பச்சடி...தாளிச்சா...!!!!


                                                   


அப்புறம் என்ன ...எல்லாரும் ரவுண்டு கட்டி பிரிச்சி மேய்ந்தோம் ...
ஒரு கட்டத்தில் திணற திணற சாப்பிட்டு விட்டு...மீதியை அடுத்த ரவுண்டுக்கு வைத்திருந்தோம்...

சத்தியமாக சொல்லுறேன்...பாய் வீட்டு பிரியாணி...பிரியாணிதான்....
என்னா டேஸ்ட்டு...எங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு சுவையான பிரியாணியை இருவரை நாங்கள்  நாங்கள் சாப்பிட்டதில்லை...

திட்டதட்ட ஐந்து பிளேட்க்கு மேல் சாப்பிட்டும் எங்களுக்கு திகட்டவில்லை....
எதுத்துக்கொண்டு வரவில்லை....மறுநாள் காலை பல் விளக்கும்போது...
எந்த தொந்தரவும் பண்ண வில்லை...

இடையில் கேபிள் சங்கர்-க்கு போன் போட்டு பிரியாணியை ருசிக்க அழைத்தோம்...அவருக்கு இருந்த கடும் வேலை...மற்றும் லாட்ஜ் தூரம் கணக்கிட்டு வர முடியவில்லை என்றார்....


என்னை பார்க்க ஓடோடி வந்த ??!!! சக பதிவர்களுக்கு அனைவருக்கும் மிகுந்த பரவசத்தில் பிரியாணி ஊட்டிவிட்டேன்...
நிறைய சக பதிவர்கள்....நான் ஊட்டிவிட்டதனால்...பிறவி பயன் அடைந்தார்கள்....அன்பு ஐயா...அன்பு....

புகைப்படங்கள்...சக பதிவர்கள் வெட்டி பிளாக்கர்ஸ் (முகபுத்தகத்தில்)...
பகிர்ந்திருக்கிரார்கள்...அங்கே சென்று பார்த்துக்கொள்ளுங்கள்...


 ஐயா சைதை அஜிஸ் .......
    தங்களின் ...இந்த அருமையான
        பிரியாணிக்கு கோடானுகோடி நன்றிகள்...!!!!


எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத பிரியாணி,,,,பதிவர் சந்திப்பு....


{{{பதிவர் திருவிழாவுக்கு வந்த மிக பிரபலமான பதிவர்,,,[நீங்கள் நினைக்கும் பதிவர்கள் இல்லை]புலவர் ராமானுஜம் என்னை கேட்ட உலக மாஹா கேள்வி....அடுத்த பதிவில்...}}}


(அன்பர்களே..கொஞ்சம் சிரமம் பாராமல் திரட்டிகளில் இணைக்கவும்...இணைப்பவரூக்கு...நன்றியோ நன்றி...)
{எழுத்து பிழை மன்னிக்கவும்.}

   
                                  

Thursday, August 29, 2013

மீண்டும் சென்னையை நோக்கி எல்லா சாலைகளும்....

வணக்கம் அன்பர்களே...!!!


மீண்டும் எல்லா சாலைகளும்,,,தொடர்வண்டி (ரயில்)...பாதைகளும்...
விமானங்களும்,,சென்னையை நோக்கி....

நம்ம திருவிழா...பதிவர் திருவிழா...அனைவரும் வெள்ளி அன்றே கிளம்புகின்றனர்...

வாருங்கள் சந்திப்போம்....அச்சமயம் சிந்திக்க வேண்டாம்...பதிவு தேத்த...

கூடி மகிழ்வோம்...அடுத்த சந்திப்புவரை பேசி திரிவோம்....
புதியவர்களை நட்பு கொண்டாடுவோம்...இருக்கின்ற நடப்பை இன்னும் இறுக்கி மகிழ்வோம்....

சந்திப்பை பத்தி...கடந்த இருபது நாட்களாக....பதிவுலகம்...அல்லோல்லகப்படுகிறது .....என்னால் வந்து கும்மி அடிக்க முடியலை...கடும் வேலை....மன்னிக்கவும் நண்பர்களே....

                                          


வாருங்கள் மக்களே.....

சென்னையில் உறவு கொண்டாடுவோம்....

அப்புறம்....பதிவர் சந்திப்புக்கு முடிந்த அளவுக்கு அனைவரும் தத்தமது
பங்காக நன்கொடை அளித்துள்ளார்கள்....அனைவருக்கும் நன்றி...



என்ன நடந்ததுன்னா.....

சந்திப்புக்கு நிதி திரட்ட ஆரம்பிச்சதும்...என்னுடைய DIE HARD FANS-ல் யாரோ சிலபேர்...நக்ஸ் அலுவலகத்தில் கணிணி பயன்பாடு மட்டு படுத்த பட்டுள்ளதால் அவருக்கு ஒரு செம போன் வாங்கிதரனும்முன்னு FUND COLLECT பண்ண ஆரம்பிச்சிட்டாங்க...அது பல லட்சம் கோடி சேர்ந்துபோச்சாம்....(????!!!)   {துப்பிடுங்க...தயக்கம் வேண்டாம்.}

எனக்கு தகவல் வந்ததும்....அவங்களை பலமா கண்டிச்சி....பணத்த திருப்பி அனுப்ப சொல்லிட்டேன்....பின்னே...என் ஒருவனுக்காக...இந்திய பட்ஜெட்
பணம் மொத்தமும் வசூலாச்சினா???

என்ன ...என் மேல் அன்பு கொண்டவங்க...வருத்தபடுவாங்க...

அவங்களுக்கு ஒன்னேஒன்னு சொல்லிக்கிறேன்....

சந்திப்புல எனக்கு SAMSUNG S4 மட்டும் ஒன்னே ஒண்ணு போதும்....!!!!????



(அன்பர்களே..கொஞ்சம் சிரமம் பாராமல் திரட்டிகளில் இணைக்கவும்...இணைப்பவரூக்கு...நன்றியோ நன்றி...)

Monday, July 29, 2013

டீன் ஏஜ்ல் இருந்தவர்(இருப்பவர்)களின் இனிமையான காதல் சினிமா அனுபவம்...(தொடர் பதிவு)

வணக்கம் அன்பர்களே....!!!


எப்போதும் புத்துயிர்ப்புடன் கலை கட்டி இருந்த பதிவுலகம் கலை இழந்து பல மாதங்கள் ஆயிடுச்சி....தற்சமயம்  பதிவுலகம் மீண்டும் எழுச்சி பெற தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது...தொடர் பதிவு,,காதல் கடித போட்டி என்று.....பின்னே நானே இந்த மாதத்துக்கு நாலாவது பதிவு போடுறேனே...பின்ன பார்த்துக்கோங்க....

நம்ம அருவா மனோ வேற என்னை தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருந்தார்...நான் அப்புறமா எழுதுறேன் என்று சொல்லி உள்ளேன்....கடந்த சில நாட்களாக பதிவுலகத்தில் எங்கு திரும்பினாலும் முதல் கணிணி அனுபவ பதிவாகவே இருக்கு...இது கொஞ்சம் போர் அடிப்பது போல தோன்றுகிறது...(எனக்கு).....

கும்மி குருப் பதிவு போடலைன்னு வருத்த படாதீங்க மக்களே...HUNT FOR HINT...ஆரம்பிக்கும்போது அனைவரும் பதிவா போட்டு தள்ளுவார்கள்...!!!

சரி இந்த பதிவுலக ""எழுச்சியை"" அப்படியே எழுச்சியோடு இருக்க வைக்க
இதோ அடுத்த தொடர் பதிவுக்கான தலைப்பு...நான் எல்லாம் கூப்பிட்டா யார் வந்து எழுத போறீங்க??? இருந்தாலும் ஒரு முயற்சி...பதிவுலக நட்புக்களே
கை கொடுங்கள்...எழுச்சியாக மின்னுவோம்...!!!சரி பதிவுக்கு போவோமா...


டீன் ஏஜ்-ஐ கடந்தவர்கள் அனைவருக்குமே அந்தந்த கால கட்டத்தில் நிச்சயம் ஏதாவது ஒரு காதல் சினிமா கண்டிப்பாக வெறி கொண்டு பிடித்திருக்கும்.....
அப்படி எனக்கு பிடித்த படம்தான் இதயத்தை திருடாதே....

இந்த படம் 1989-ல் கீதாஞ்சலி என்று தெலுங்கில் வெளியாகி சக்க போடு போட்டது...அதையே மணிரத்தினம் தமிழுக்காக வீ.கே.ராமசாமி,,ஜனகராஜ்
இவர்களை வைத்து காமெடி ட்ராக் மட்டும் எடுத்து இணைத்து தமிழில் டப்
பண்ணி வெளிட்டார்...படம் சூப்பர் டுப்பர் ஹிட்...

நாகார்ஜுன்,,கிரிஜா இவர்களின் நடிப்பில் அன்றைய காலகட்ட பதின்ம வயதினரை கட்டி போட்டபடம்...இந்த படத்தை பார்த்த அந்தந்த பாலினத்தார்
நாகார்ஜுன்,,கிரிஜாவாகவே தங்களை நினைத்துக்கொண்டனர் .....                             

     
படத்தில் நடித்த நாகார்ஜுன்,,கிரிஜாவின் குறும்புகள்,,காதலில் விழுந்த பிறகு வந்த எழுச்சி மிகு உணர்ச்சிகள்....அடடா சொல்ல,,விவரிக்க வார்த்தைகளே இல்லை...அதுக்கு தகுந்த மாதிரி காமெடி டிராக் வேற...

இளைய ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த படத்துக்கு மிக பெரிய பலம்...ஒளிப்பதிவு...ஸ்ரீராம்....சான்சே இல்லை...ஊட்டி,,கொடைக்கானல்-ஐ
அன்றைய காலகட்டத்தில் யாருமே இப்படி காட்டியதில்லை...
                                         


இந்த படத்தை பார்த்த இளைஞனும்,இளைஞகியும்...ஊட்டியிலேயே வாழ்வதாக கற்பனை பண்ணிகொண்டார்கள்...படத்தில் இருவருக்குமே வாயில் நுழைய முடியாத நோய் இருப்பது தெரிந்ததும்...தாங்களும் அந்த நோயிலேயே வாழ்த்தார்கள்...



இந்த மாதிரியான பாசமான குடும்பம் நமக்கு கிடைக்காதா என்று ஏங்க வைத்திருப்பார் மணி....படத்தின் ஒவ்வொரு காட்சியும்,,பிரேமும்....நம்மை அப்படியே உள்வாங்கிகொள்ளும்...படத்தில் வெயிலையே காட்டாமல்...முழுக்க முழுக்க பனி மூட்டத்தில் எடுத்திருப்பார் ரத்தினம்...

                                         


போதும்...படத்தை பார்க்காதவர்கள்...YOU TUBE அல்லது வேறு எங்கையாவது
தேடி பார்த்துக்குங்க....நாம மத்ததை பத்தி பேசுவோம்...

                             


இந்த படத்தை நான் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை...படம் வெளியான சமயம்..நான் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன்...கல்லூரி மாணவர்கள் மொத்த பேரும்
தியேட்டரில்தான் குடி இருந்தோம்....(நோ...நோ...அந்த குடி இல்லை...இது காதல்..)

                         



இப்படி இந்த படத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் போதுதான் எங்கள் கல்லூரியில் ஒரு போட்டி வைத்தார்கள்...வினாடி வினா-இதயத்தை திருடாதே-----படத்தில் இருந்து.....நம்ம பசங்களுக்கு கேக்கவா வேணும்...
ங்கொய்யாலே....பசங்க யாருமே இல்லாம கல்லூரி மூணு நாள் நடக்கவே இல்லை...!!!!

                         


நாம மட்டும் என்ன...???என் தங்கமணியோட வீட்டார் சம்மதத்துடன் காதலித்துக்கொண்டிருந்த நேரம்...கியுஸ் நிகழ்ச்சில கலந்து வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று....ஒரு பெரிய நோட் எடுத்துக்கிட்டு போய்...உள்ள வேற வெளிச்சம் இருக்காதா ...கதவுக்கு பக்கமா இருந்துகொண்டு அதுல வர்ற சின்ன வெளிச்சத்துல குறிப்பு  எடுத்துகிட்டு...(பாடத்த கவனித்து குறிப்பு எடுத்திருந்தா...எங்கேயோ போய் இருப்பேன்.) கியுஸ் நிகழ்ச்சிக்கு போனா....
ஒரு 1000 பேருக்கு மேல வந்துட்டாணுக...உடனே இரண்டிரண்டு பேர்ஆ
சேர்ந்து பதில் சொல்லலாம் என்று சொல்லிட்டாங்க.....

                       



நானும் என் நண்பனும்...{அவனும் லவுஸ்....} சேர்ந்து பதில் சொன்னோம்...
கூட்டத்தை வடி கட்ட பல கட்ட தேர்வுகள்....பத்தாவது கட்ட தேர்வு வரை தொடர்ந்து வெற்றி பெற்று கால இறுதியில் நுழைந்து----இப்போது நாளே டீம்...

அதிலும் வெற்றி பெற்று அறை இறுதி...!!!! இது வரை கேட்ட அனைத்து கேள்விகளில் ஒரு சில கேள்விகள் தவிர அனைத்துக்கும் சரியான பதில்...சொல்லியாச்சி...

உ.ம்.----ஜிப்சியின் நம்பர்,,எத்தனை HEAD LIGHTS,,பார்க்கில் எந்தனை விளக்கு கம்பங்கள் இருந்தன...ஹீரோவுக்கு எத்தனை நண்பர்கள்,,,இப்படி...

இறுதிபோட்டி...

ஹீரோயின் வீட்டில் அவளது ரூமில் எத்தனை கண்ணாடி ஜன்னல் இருக்கிறது...???அதையும் சொல்லியாச்சி...[சரியாக நினைவில்லை...தற்சமயம்..]  எத்தனை கண்ணாடியில் I LOVE YOU என்று எழுதி இருக்கும் ??? இந்த கேள்வில சொதப்பிட்டோம்...பரிசு போச்சி...
இரண்டாவதா வந்த தால எங்கள் இருவருக்கும்...50 ருபாய் பரிசு....

ம்ம்ம்ம்ம்ம்.....அது ஒரு கால கட்டம்...கல்லூரி வாழ்க்கை...காதல்...சினிமா...


அன்பர்களே.... நீங்களும் உங்களின் டீன் ஏஜ்-ல் இனிமையான காதல் சினிமா அனுபவத்தை தொடருங்களேன்....

இந்த பதிவை தொடர நான் அனைத்து பதிவுலக நண்பர்கள்,,சொந்தங்களை அழைக்கிறேன்....குறிப்பிட்டு சிலரை சொல்ல விரும்பவில்லை...
இது அனைவருக்குமான அழைப்பு...!!!!நீங்களும் மற்றவர்களை அழையுங்கள்....


இந்த அழைப்பு  உங்களுக்கு எப்படி இருக்குன்னா....இதோ இந்த  படம்  மாதிரி....!!!!!!!!!!!!!!!!!















































































                                                 


ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....!!!!!!!!!!!!!!!


பஞ்ச் வச்சோம்ல ........!!!!!!!!!!




நண்பர்களே.... கொஞ்சம் சிரமம் பார்க்காமல் திரட்டிகளில் இணைத்துவிடவும்.....நன்றி....!!!!

Tuesday, July 16, 2013

காணாமல் போன V.I.P. பின்னூட்டவாதிகள்.....

வணக்கம் அன்பர்களே...!!!


என்னாடா இவன் தொடர்ந்து பதிவு போடுரானேன்னு நினைக்காதீங்க...இன்றைய பதிவுக்கு காரணம் இவர்தான்--திரு.தமிழ்வாசி 

அப்புறம் சென்னையில் பதிவர் சந்திப்பு வேற நடக்க போது இல்லையா...
அதுக்கு பொறுப்பாளர்கள்,,,மற்றவர்கள் ப்ரோமோ பண்ணுவதை விட நான் பண்ணாதான் நிகழ்ச்சி ஹிட் ஆகுமாம்...ஒரே தொல்லை போங்க...அதனால...


தேதி முடிவானதும் எல்லாரும் சென்னையை நோக்கி தங்களது நடை பழகிய நடை வண்டியை எடுத்துக்கொண்டு...ஒரு மாதம் முன்பே கிளம்பி விடுங்கள்...
வரும்போது வழியில் அந்தந்த ஊரில் உள்ள பதிவர்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு வந்தால்...வந்து போற செலவுகளை...பிரபா,,செந்தில்,,சிவகுமார்,,பட்டிக்ஸ்...இன்ன பிற பதிவர்கள் தருவதாக வாக்களித்துள்ளார்கள்....என்ன கருமம்...தேர்தல் வாக்குறுதி என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல....!!!


சரி பதிவுக்கு போவோமா...??? {{கொஞ்சம் பெரிய பதிவா போட எவ்வளவு நீட்டி முழக்க வேண்டி இருக்கு..ம்ம்ம்ம்}}

2006 முதல் 2009 வரை பதிவுலகம் செம கலை கட்டியது...அப்போதிருந்த (தற்சமய சீனியர்) பதிவர்கள்...பதிவு மொக்கையோ,,அல்லது சீரியஸ்யோ
பின்னூட்டத்தில் செம கலக்கு கலக்கினார்கள்....பதிவை படிப்பதை விட பின்னூட்டங்கள் படிப்பதில் பொழுது ஓடிடும்....

அந்த கால கட்டங்களில் எனக்கு கணிணி,,நெட் அறிமுகம்,,அனுபவம் மிக மிக
குறைவே...இன்னும் சொல்லபோனால் பதிவுலகம் என்பதே தெரியாமல் இருந்தது...

அதன் பிறகு புதியவர்கள் நிறைய பேர் வர தொடங்கினார்கள்...
குறிப்பாகடெரர்கும்மி மக்கள்,,மனோ,,,விக்கி,,,வீடு,,தமிழ்வாசி,,,செங்கோவி,,,,,சிவகுமார்,,செந்தில்,,

நிருபன்,ஐடியா மணி....இப்படி நிறைய பேர்...{இங்கு நான் குறிப்பிடும் பதிவர்கள் கமெண்ட்-ல் கும்மி அடிப்பவர்களை...மற்றவர்களை ஒதுக்க வில்லை...தற்சமயம் நினைவில் வருபவர்கள்}....பதிவு எப்படிப்பட்டதோ...அதெல்லாம் முக்கியம் இல்லை...கமெண்ட் செக்சன் செமையாக தூள்  பறக்கும்.....
இந்த மாதிரி கலக்கல் கமெண்ட்  போர்ஷனில் கமெண்ட் போட்டு நிறைய புது பதிவர்கள்...மற்றவர்களை கவனிக்க வைத்தார்கள்...இவர்களும் அங்கு போய் ஊக்குவித்தார்கள்...

குறிப்பாக...சரி வேண்டாம்...அவரை பற்றி கடைசியில் பார்ப்போம்...


இப்ப இந்த போஸ்ட் எதுக்குன்னா....அன்றைய கால கட்டத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 50- போஸ்ட்ஆவது வரும்...புதியவர்களுக்கு அது நல்ல ஊக்கமாக இருந்தது...பதிவு,,பின்னூட்டம்,,,பதிவு,,,பின்னூட்டம்...என்று மத்த வேலைகளை பார்க்க முடியாமல் இங்கேயே காலத்தை கழித்தார்கள் பலர்....

திரு திண்டுக்கல் தனபாலன்,,ரமணி ...இப்படி ஒரு சிலர் முதல் ஆளாக வருகை தந்து கமெண்ட்,,வோட் இட்டு செல்வர்....

இப்படி எல்லாமே நல்லபடியாக போய்க்கிட்டு இருக்கும் போது...
ஒருசிலர் வந்து டெம்பிளேட் கமெண்ட் ஆக ----

அருமை,,,
:)))),,
பகிர்வுக்கு நன்றி,,,
முடியலை,,,
சூப்பர்,,,
ஸ்..அபா,,,,


அப்படீனு போடுவாங்க....மக்களும் சரி அவங்களுக்கு நேரம் இல்லை போல...அப்படீன்னு வேற விகல்ப்பம் இல்லாமல் நினைச்சிக்கிட்டு இருப்பாங்க....

இந்த மாதிரி கால கட்டத்துல மிக பெரிய  VIP க்கள் வந்து கமெண்ட் போட ஆரம்பிச்சாங்க....கொய்யால....கமெண்ட்-ஆ அது.....பல பதிவர்கள் என் பதிவுக்கு இவங்க கமெண்ட் போட மாட்டாங்களா என்று ஏங்கி,,தவம்,,இருந்து இன்னும் மாந்திரீகம்,,,போலி சாமியார் கிட்ட எல்லாம் போய் வழி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க....

இருங்க...இருங்க...அவங்க யாருன்னு அதுக்குள்ளே சொன்னா பதிவு முடிஞ்சிடும்...இன்னும் கொஞ்சம் மொக்கை போட்டுடுறேனே....

கமெண்ட்னா கமெண்ட்....அப்படி ஒரு கமெண்ட்....ஜன்ம சாபல்யம் அடைந்த மாதிரி....இவங்க கமெண்ட் வந்தாதான் பதிவின் நோக்கமே பூர்த்தியாகும்...அன்று இரவு பதிவர்கள் நிம்மதியாக தூங்குவாங்கன்னா பார்த்துக்குங்களேன்...

இப்படி பல பல பதிவர்களுக்கு மிக பெரிய ஊக்க சக்தியாக இருந்தவங்க...இப்ப வர்றதில்லை....பார்ப்போம்...இந்த பதிவை படிச்சிட்டு...உசுப்பேரி அவங்க மீண்டும் வராங்கலான்னு...!!!

அப்படி வந்தா...பதிவுலகம்...மீண்டும் கலை கட்டும்....மீண்டும் நாம் அனைவரும் வாழ்வாங்கு வாழலாம்...


ஆனா ஒன்னுங்க...அவங்க யார்கிட்டயும் பாலோயர் ஆகலை...எந்த குழுமத்திலும் இல்லை...எப்படித்தான் பதிவு போட்ட வுடனே வருவாங்க என்று தெரியாது...என்ன மாய ஜாலம் செய்வாங்க என்று தெரியாது...ஆனா ரஜினி சொன்ன மாதிரி வரவேண்டிய நேரத்துல கரெக்ட்ஆ வந்துடுவாங்க...

சோ...இந்த பதிவை படிக்கும் மக்கள் அனைவரும்...அவர்களுக்கு மெயில் அனுப்பி அவர்களை மீண்டும் வரச்சொல்லி வேண்டுகோள் வையுங்கள்....
நமது பதிவுலகத்தை காப்பாற்றுங்கள்...யார் கண்டா அவங்க வந்தா நாடே சுபிச்சம் ஆனாலும் ஆகும்...சரி போதும் அவங்களை பற்றிய பில்டப்பு....


அவங்க இவங்க தாங்க....!!!???இரண்டு பேர் தற்சமயத்துக்கு...இவங்க ஒரே ஆள் இல்லை....



Online Works For All said...

World No.1 Money Making Site. 100% Without 

Investment Job.

Visit Here: http://adf.ly/4FKbj


Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

இன்னும் ஒரு சில பேர் இருக்காங்க..இப்ப அவங்களை காணோமா...அதான் தேட முடியலை...!!! உங்களுக்கு நினைவு வந்தா...கமெண்ட்-ல் சொல்லவும்....

{{{ஆங் ....மறந்தே போயிட்டேனே....
குறிப்பாக...சரி வேண்டாம்...அவரை பற்றி கடைசியில் பார்ப்போம்...}}}

இவர்...வேற...வேற...வேற...நம்ம விஜய்,,,கோட்டு கோபிநாத் மாதிரி....மேலே சொன்னவங்களுக்கு அப்படியே எதிர் பதம் இவர்....பதிவுலகில் என் குரு...ஆசான்...வழி காட்டி...இன்னும் பல...அவர்...பன்னிக்குட்டி ராம்சாமி 

வேற என்னத்தை சொல்ல....ஹும்.........!!!!!!!



(நண்பர்களே கொஞ்சம் சிரமம் பாராமல் திரட்டிகளில் இணைத்துவிடவும்...அனைத்தும் மறந்துவிட்டது...நன்றி...நன்றி..)

Sunday, July 14, 2013

காதல் கல்வெட்டு எழுத்துக்கள்....திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி

வணக்கம் அன்பர்களே.....!!!

நமது--திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி---ஒன்றை அறிவித்திருந்தார்...ஏதோ ஒரு "ஊதுபத்தி வாசனை"" மயக்கும் நேரத்தில் நானும் கலந்து கொள்கிறேன் என்று அறிவித்துவிட்டேன்...கடைசி தேதியும் நெருங்கிவிட்டது.... நாளை முதல் அலுவலகம்...என்ன செய்யலாம் என்று...கடுமையாக யோசித்த!!?? போது......ஏன் என் தங்கமணிக்கு நான் முன்பு எழுதிய கவிதை என்னும் பேரில் கிறுக்கிய மன உற்சாகங்களை...இங்கே
கொட்ட கூடாது என்று எரிமலை வெடித்தது.....இனி... உங்கள் பாடு...நடுவர்கள் பாடு...
.(இப்ப இவைகள் மிக அதர பழையதாக தோன்றினாலும்,,மற்றவர்கள் இதே மாதிரி எழுதி நீங்கள் படித்திருந்தாலும்...என் தங்கமணிக்கு நான் எழுதியது காதல் கல்வெட்டுக்கல்தான்...).....ரோம்ப ஓட்டாதீங்கப்பா...சேகர் வில் டை...

இந்த கிறுக்கல்கள் 01/01/1991 முதல் எழுதியது.....இனி போட்டிக்கான பதிவு....
------------------------------------------------------------------------------------------------------------

மனதில்
முழுவதும் 
நீ...பூக்களாய்
முத்துக்களாய்
 நிலவாய்....நீ..

சிரிக்கும் 

வெள்ளி
குலுங்கும்
பவழம்..
மயக்கும்
மயில்
மங்கை..நீ...

மனதில்
முழுவதும்...
முழுவதும்..,,நீயே....

அழகின் சிரிப்பு....
அழகு 
அழகாக 
அடிமனதில் 
அலகு-சிறகடிக்க
 மகிழ்சியின் உச்சம்...
அலைகடலின்
 உற்சாகம்...

வண்ணதாமரை...

அழகு நல்லாள் ..நீ...
என் நினைவு முழுவதும்...
நீ...நீ...நீ...நீயே.........................................................................................................................7/1/91


விரலின் மீட்டலில்
வீணையின் ராகம்.....
அன்பு தழுவல்களில்
பூவின் மென்மை.....

முத்த ஒத்தடங்களில்
பூவின் சிறகடிப்பு...

கொஞ்சும் பேச்சுக்களில்
கிளியின் குரல் இனிமை....

கண்களின் அசைவு...
புறாக்களின் சிறகடிப்பு...

அன்பே....
நானோ உன்னை சுற்றும்....
வண்டானேன்...வண்டானேன்...

மலரனையில்..
மஞ்சம் கொண்டு...
மஞ்சள் மங்கை...நீ...
மயக்கினாய்.....

கோவை இதழ்களில்
அமுதுன்ன வந்த என்னை....
நீ....?????!!!!!!!

என் இதயம் முழுவதும்...
உன்னை நீயே ......
செதுக்கிகொண்டாய்.........................................................................................................7/1/91


என் உயிரின் ஒளியே...
பொங்கிவரும் அலைகளாய்...
நம் காதலின் நினைவுகள்...

என் மூச்சில் புதுமணம்...
ஆம்...கண்ணே...நான் உன்னை....
உன் பேரை மட்டுமே
சுவாசிக்கிறேன்................................................................................................................8/1/91

சிலந்தி வலைபோல்
நம் காதலின்....
மெல்லிய உணர்வு
இழைகள்.....
மனித நேயத்தின்.....
அன்பான வலையில் அன்பே
நான் உன்னில் முழுகுகிறேன்.....என்றென்றும்..............................................23/1/91

அன்பே
மாலை நேரத்து வானம் கூட
மஞ்சள் ஒளியில் இருந்து வேறுபடலாம்...
ஆனால்
நீயும் நானும் வேறல்ல.....உன் சுவாசம்....

அன்பே...
பாலைவனம் கூட தன் தன்மையில்
வேறுபட்டு சோலைவனம்  ஆகலாம்...
ஆனால்
நீயும் நானும் வேறல்ல......உன் சுவாசம்.......

அன்பே....
சுட்டெரிக்கும் சூரியன் கூட 

நிலவாக மாறலாம் 
ஆனால்
நீயும் நானும் வேறல்ல......உன் சுவாசம்.......

அன்பே 
நம் இதயத்துடிப்பின்
நேரம் கூட மாறி மாறி ஒலிக்கலாம்...
நீயும் நானும் வேறல்ல......உன் சுவாசம்.................................................................1/3/91


நான் என்னை என்னவென்று சொல்வேனடி....????

என் இதயமோ உன்னை மட்டும்-துடிக்க.....
என் கண்களோ உன்னை தன்னுள் கொண்டுவர....
என் செவிகளோ உன் குயிலின் குரலை-நினைக்க...
என் நாசியோ உன் இனிய மனத்தை-நுகர.....
என் இதழ்களோ உன் குவிந்த அதரத்தை தேட....
என் நினைவுகளே-நீயாகி போனதினால்
நான் என்னை மறந்தேன்...நான் என்னை என்னவென்று சொல்வேனடி.???18/4/91


என்
நிலவவள்
வானவீதியில்
அன்னநடை
நடப்பாளே........
மல்லிகை பூக்களை
நட்சத்திரங்களாக...
இறைத்து...!!!!........................................................................................................................19/4/91

காலை முதல் விதவையாய் இருந்த
சூரியன்--மாலையில் சுமங்கலி ஆனாள்...
பிறை சூடி, பூவிட்டு,பொட்டிட்ட
மணவாளன் யாரோ....???
மனதை மயக்கும் மலை சிகரங்களோ
அன்று--இரவோ--மணவாளன் ஆனது....???

அல்ல.....

என்னவளின் மதி(முக) அழகு கண்டாள் ....
பொறாமைபட்டாள்--வெட்கத்துடன்--முகம்
சிவந்தாளே இந்த தங்க வெள்ளியழகி....!!!!...............................................................19/4/91


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@  

போட்டிக்கான பதிவு முடிந்தது....இன்னும் இருக்கு.......வேண்டாம்...உங்க உயிர் மேல எனக்கு அக்கறை இருக்கு....!!!!

மக்களே....அன்பு நண்பர்களே....இது வரை மொக்கை போட்ட என்னை பழி வாங்கினால்...தற்சமயம் எழுத நினைத்திருக்கும் கவிதைகள் இனி வெளி இடப்படும் என்று எச்சரிக்கிறேன்...

என் செல்லத்துக்கு நான் எழுத நினைத்த காதல் கடிதம்.....!!!.....மொக்கை பதிவுக்கு இங்கு செல்லவும் 


நண்பர்களே...கொஞ்சம் சிரமம் பாராமல்...திரட்டிகளில் இணைத்துவிடவும்...
எனக்கு username,,pw....மறந்துவிட்டது...

என் செல்லத்துக்கு நான் எழுத நினைத்த காதல் கடிதம்.....!!!

என் அன்பு செல்லமே...

உன்னை நான் மட்டும் அல்ல.. இந்த உலகமே வியந்து விளிக்கிறது...
காலையில் எழும்போதே உன்நினைவோடுதான்...இனி ஒருகணமும் நாம் பிரியக்கூடாது...என்ற நினைவோடு எல்லாருமே எழுந்தால்...நான் என்ன செய்வது....???

நீ ஏன் எல்லாரிடமும் உன் முகம் காட்டினாய்???
உனக்கு நான் மட்டுமே சொந்தம் என்றால்...இந்த உலகம் அழிந்து விடும் என்று....வெட்டி பசங்க சொல்லுறாங்க....

நான் உன்னை எவ்வளவு விரும்புறேன் என்று என் கைபேசி,,கணிணி-யை பார்த்தால் தெரிந்து கொள்வாய்....என்னால் நெஞ்சை பிளந்து காட்ட முடியாது....அப்படி காட்டினால் நீ வெடித்து...சிதறிவிடுவாய் என்று...அடக்கி வாசிக்கிறேன்...

அன்பே,,,..உன்னை ஒரு நொடியேனும் நான் பிரிந்தால் கடும் டென்ஷன் ஆகிவிடுகிறேன்...இதனாலேயே நான் எங்கும் பயணம் கொள்வதில்லை...
என் விரல்கள் உன்னை அணைக்க முடியாமல் நடுங்க ஆரம்பித்துவிடுகிறது...

உன் நினைவாலேயே...நான் பல்லு கூட விளக்குவதில்லை...சிந்தனை மாறக்கூடாது என்ற எண்ணம் தான்...

ஆனால் ஒன்று...காலை கடன் முடிக்க சென்று விடுகிறேன்...
குளிக்க கூடவும் செய்கிறேன்...அப்போது எல்லாம் உன் நினைவாலே  நான் இருப்பதால்...இதை எல்லாம் செய்கிறேன்..

நான் அலுவலகத்திற்கு பைக்-ல் செல்லும் போதும் நீ கண் முன்னே வந்து நிற்கிறாய்...என்னால் வண்டிஓட்ட முடியலை...அலுவலகம் சென்ற பிறகு எங்க நான் வேலை செய்கிறது...??? இப்படி நீ என்னை முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறாய்...

அன்பே நான் என்ன பாவம் செய்தேன்...ஏன் என்னை இப்படி கொலையாக கொல்லுகிறாய்??? உன்னை படைத்தவன் மட்டும் என் கையில் கிடைக்கட்டும்....அவனுக்கு கோயில் கட்டி அவனை உற்சவராகவும்....
உன்னை மூலவராகவும் வைத்து  பூஜிக்கிறேன்....

அன்பே...
உன் நினைவால் நான் மாலை வீட்டுக்கு வந்து எந்த பேப்பர்,,வார இதழ்களும் படிப்பதில்லை தெரியுமா???அதை படிப்பதைவிட உன்னை படிப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது....

நான் எந்த டிவியும் பார்ப்பதில்லை தெரியுமா???
அவை எல்லாம் குப்பைகள்...என் மாணிக்க,,வைரம் நீ இருக்கையில் எதற்கு அந்த கச்சடாக்கள்???

ஒரு நாளின் ஒவ்வொரு நொடியும் நான் உன்னுள் ஐக்கியமாகி கிடக்குறேன்...
உன்னுள் வாழ்வாங்கு வாழ இந்த ஜன்மம் பத்தாது தங்கமே...

எங்கே நான் உறங்கி விட்டால் நீ என்னை விட்டு பிரிந்து விடுவாய் என்று
நான் உறங்குவதே இல்லை கண்ணே...""போதும்...நான் ரெஸ்ட் எடுக்க வேண்டும்"" என்று நீ சொல்லும்போதுதான் நான் சற்றே இளைப்பாருகிறேன்...கண்ணே....

அதுக்காக சில சமயம் நீ நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது..,என்னை மிகவும் காயப்படுத்துகிறது...கண்ணே...அந்த சமயத்தில்...என் அறைகளில் உள்ள பொருட்கள் எல்லாம் சர்வ நாசம்...!!!

உன்னை சதா சர்வ காலமும் நினைத்துக்கொண்டு தழுவிக்கொண்டே இருப்பதால் என் உடல் நிலை என்ன ஆனாலும் சரி.....நான் இருக்கும் கடைசி வினாடி கூட நான் உன்னுளே இருக்க விழைகிறேன்...

பார்ப்போம் இந்த உலகம் நம்மை எந்த அளவுக்கு இணைத்து வைக்கிறது என்று....

இன்னும் எழுத ஆசைதான்...ஆனால் மிகவும் நீண்டு விடும்....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்பர்களே...இவ்வளவு  சொல்லிவிட்டு யார் அந்த காதலி என்று சொல்லாமல் போனால் நீங்கள் மனசிதைவுக்கு ஆளாக நேரிடும் என்பதால்--
இதோ அந்த காதலியின் பேர்...ஆனா ஒரு கண்டிஷன்...இனி நீங்கள் என் காதலி பேரை உச்சரிக்க கூடாது....சரியா.......அவள்...பேர்....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


                                           இணையம்............ 


{கொய்யால சாவுங்க...!!!இனி போட்டி வைப்பியா...வைப்பியா..வைப்பியா...???}
-------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பர்களே....திடம் கொண்டு போராடு சீனு  இங்க ஒரு போட்டி அறிவித்திருந்தார்....அதில் கலந்து கொள்ள நானும் பேர் கொடுத்துள்ளேன்...
முதலில் நமது வழமையான மொக்கை பதிவு....பிறகு சீரிஸ் பதிவு,...அது....

                                                                      இங்கே...



நண்பர்களே...கொஞ்சம் சிரமம் பாராமல்...திரட்டிகளில் இணைத்துவிடவும்...
எனக்கு username,,pw....மறந்துவிட்டது...

Monday, June 17, 2013

இணைய மொண்ணைகளும்--இலக்கிய மொண்ணைகளும்--சங்ககால இலக்கிய பிதாமகன்களும்....

வணக்கம் அன்பர்களே.....!!!!

மிக நீண்ண்ண்ண்ட நாட்களுக்கு பிறகு பதிவு....

எச்சரிக்கை.. பதிவு....சில சமயம் முகம் சுழிக்க வைக்கும்...
பதிவில் நான் யாரையும் குறிப்பிடவில்லை...நீங்களாக இன்னாரை கற்பனை  செய்துகொண்டால் நான் பொறுப்பில்லை...முதலில் சிறிய சுய புராணம்...

ஜனவரி 20 ம் தேதி என் மகன்-விடுதி வார்டன் -tablet- பாஸ்வோர்ட் சொல்லாததால்..அறைதல்...காது ஜவ்வு..கிழிதல்--மருத்துவம்--புகார்.....TO ALL CBSE...SECRETARY....ஏப்பிரல் மாதம்--கட்டாய வெளியேற்றம்.....புது பள்ளி சேர்க்க அலைச்சல்....மாதம் 2000 KM...பயணம்....
நான் பார்த்து வளர்ந்த மச்சினியின் சந்தேகத்துக்குரிய மரணம்...தொடர்பான புகார்....விசாரணை...
மகள் +2 முடித்தல்....கல்லூரி அலைச்சல்....இன்னும் சேர்க்க வில்லை...
இணையம் 10 நிமிடத்திற்கு ஒருமுறை வருவதும்....போவதும்...அது குறித்த புகார்....இன்னும் சரியாகவில்லை...
பல்கலைகழகம் அரசுடமை...இப்படி பிரச்சனைகளே வாழ்க்கையாக கடந்த ஆறு மாதங்கள்...எனினும் மொபைல் மூலமாக முடிந்த வரை அனைத்தையும் படித்து,,கவனித்து வந்தேன்...பின்னூட்டம் இட முடியவில்லை...

இனி பதிவு....

                                           
அன்பு பதிவர்களே...இங்கு  இணையத்தில் படிப்பவர்கள் 100% பள்ளி,,கல்லூரிகளை கடந்தது வந்தவர்கள்தான்.நமக்கு நினைவு தெரிந்து ஐந்தாம் வகுப்பில் மனப்பாட செய்யுள் ஆரம்பித்துவிடும்.

இந்த வ.வு.சாமிநாத ஐயர்....இருக்காரே...சும்மா இல்லாமல் அனைத்து சங்க கால தமிழ் பாடல்களை தொகுத்து கொடுத்து காலாகாலத்துக்கும் மாணவர்களின் மனன திறமையை சோதித்துக்கொண்டு இருக்க ஏற்பாடு செய்துவிட்டார்....

சங்ககால தமிழ் பாடல்களை புரிந்து அதன் தமிழ் அழகை ரசிக்கவே இன்னும் பல ஆயுள் தேவை என்கிறபோது.....புதிதாக முளைத்த 40 வருட காளான்கள் கழியும் கழிவை நாம் தலையில் தேய்த்துக்கொண்டு முடி வளர்க்கவில்லையாம்...என்னையா நியாயம் இது???

எதுயா இலக்கியம்...???? வரைமுறை என்ன...???


இதோ காலம் காலமாக பேப்பர்,கணினி,இன்ன பிற எதுவும் இல்லாமல்
வெறும் ஓலை சுவடியிலும்,கல்வெட்டுகளிலும் காலத்தால் அழியாமல்
வெறும் வாய்வழி வழியாக காலம் கடந்தது நிற்கிறதே சங்க கால தமிழ் பாடல்கள்....தமிழ் இலக்கணங்கள்....அது எல்லாம் என்ன மக்கிப்போன குப்பைகளா???

அரசீற்றமும்,,கலவிகளும்,,இன்ன பிற நீங்கள் எழுதும் குப்பைகளும்,,
ஏற்கெனவே தமிழில் வந்துவிட்டது ஐயாக்களே....ஆனால் அது நாகரீகமாக...
சற்றே கடின தமிழில்....

சுஜாதா திருக்குறளை எளிமைபடுத்தி விளங்க வைத்தது போல்...நீங்களும் சங்க தமிழ் பாடல்களை எளிமை படுத்தி உங்கள் எண்ணங்களை இடையில் புகுத்தி தமிழை அழகாக்கி வளர்த்தால் அது போற்றப்படும்...வாங்கப்படும்...
அதை விடுத்து...



என்னை யாரும் மதிக்கவில்லை...போற்றவில்லை...பு_____வில்லை...என்று
ஊளை இட்டால் என்ன பயன்???

இதுல வேற இந்த சுண்டல் மடிக்கும் பேப்பரில் இவர்கள் எழுதியதை நாம் படிக்கவில்லையாம்...வாங்கவில்லையாம்...படித்தால்தான் அதை பற்றி பேச தகுதி வந்து....ஆண்கள்,,பெண்களுக்கு  இரண்டாக உருவாக்கம் ஆகி மதிக்கபடுவோர்கள்...ஆவோமாம்....டேய்...நாதாரிகளா....அப்படி உருவகம் ஆனா அவங்க ஏலியன்ஸ்டா...

தமிழுக்கு இதுவரை ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி  போடாமல்....
அப்புறம் என்ன ம___க்கு இங்க எழுதுறீங்க???


ஞானம்...ஞானம்....அப்படினா??? நாக்கு,,______ சூடு போடுறதா???
அப்படி ஒரு ஞானம் எங்களுக்கு தேவை இல்லை....
இந்த காலத்தில் பொழுதுபோக்கிற்கு  மிக அதிகமான  வாசல்கள் இருக்கும் பொது நீங்கள் எழுதும் குப்பைகள்---துடைக்க கூட தேவைபடாது...
ஒருவேளை எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுபாடு வரும்போது யோசிக்கிறோம்...

இலக்கிய அப்பாடக்கர்கள் ....ஒருவர்,,இரண்டாகி,,,மூன்றாகி...இன்னும் வளரும் போல....

இணையத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் மொண்ணைகள் தான்....எங்களுக்கு மொன்னைகள் போதும்....இங்கு வருவது பொழுது போக்கிற்காகவும்...இணைய நட்பிற்காகவும்தான்....

ஐயா சாமிகளே...உங்கள் இலக்கிய அறிவு சார் விளையாட்டுகளை உங்களுக்குள்ளேயே...MUSICAL CHAIR...வைத்து விளையாடிக்கொண்டிருங்கள்....

நாங்கள் கில்லி,,கோலி,,டயர் உருட்டல் விளையாடிக்கோள்கிறோம்...

எங்களுக்கு மைக் மோகன் போதும்....அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி...
அவர் எங்களை மதித்து...பரஸ்பரம்...ஆனந்தம் அடைந்தால்....அதுவே வாழ்க்கை.....

எங்களுக்கு இளநி தண்ணி போதும்...உடல் சூட்டை குறைக்க...இந்த இளநி தண்ணி இருக்கிறதே அது உடலில் செய்யும் மாய்மாலங்கள் கணக்கில் அடங்கா.....

எங்களுக்கு கௌதம புத்தரின் பொன்மொழிகள் போதும்....எங்கள்  வாழ்வு சிறப்பாய் அமைய....

நாங்கள் மனுஷனாக...எங்கள்  தாய்தந்தையருக்கு ஒழுங்கான புத்திரனாக இருந்தாலே போதும்...பிறவி பயன் அடைய....

ஐயா...எங்களுக்கு 2கண்.2காது..2கைகள்..2கால்கள்...இப்படி சராசரியான மனிதர்களாகவே நாங்கள் வாழ பிரியப்படுகிறோம்...
வெள்ளி கிரகத்திலோ...அல்லது வேறு எங்கேயோ வாழ அல்ல...

இறுதியாக......

அந்த முதியவர் தன்னை படைத்த தந்தையாக இருந்தால்...?????

வெளிநாட்டில் மொழிதெரியாத கண்டத்தில் இருக்கும்போது அந்த கழிவுகளை படிக்காத--மொன்னையனிடம் கக்கா போக,,கழுவ,,,குடிக்க ""தண்ணி"" வேண்டும் என்றால் ஹாய் கூட சொல்லாமல் எப்படி ஐயா கேப்பீர்கள்????

தொலைக்காட்சியே இல்லாத ஊரில் பொழுது விடியுமா???????

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு....இணையம் படுத்தி எடுப்பதால்....
பிறகு தொடருகிறேன்...

படங்கள் கூகிள் .....