Pages

Monday, September 26, 2011

என்ன சுகம்---"இந்த சுகம்" ???

அன்பர்களே !!!
கடந்த 15 நாட்களாக என் கம்ப்யூட்டர்-க்கு மறை கழன்று விட்டதால் பதிவு போடமுடியவில்லை .....
இந்த 15 நாளில் என்னென்ன நடந்தது தெரியுமா ?
அதை தெரிந்து கொள்ளும் முன் கடந்த 2 மாதத்திற்கு முன்பிருந்தே தினமும் வீட்டில் நடந்ததை தெரிந்துகொள்ளுங்கள் .....FLASH BACK........





"ஏங்க கடைக்குபோய் பால் வாங்கிட்டு வாங்க ?"


"போம்மா ..எனக்கு வேலை இருக்கு !"

" ஏங்க கொஞ்சம் இந்த ரைஸ் மில் வரைக்கும் போய் இதெல்லாம் அறைசிட்டு வாங்க "


"ஏய் என்ன நினைத்துக்கொண்டு இருக்க ??..இங்க உலகம் முழவதும் உள்ள பிரெண்ட்ஸ் என்னை காணோம் என்று தேடுவார்கள் ....போ ...போ ..."

"ஏங்க உடம்புக்கு முடியலை...போய் டிபன் வாங்கிட்டு வாங்க "


"இங்க நானே பேஜ் லோடு ஆகமாட்டேங்குது-னு மண்டையை பிச்சிக்கிட்டு இருக்கேன் .... இவளுக்கு இப்பதான் டிபன் வாங்கிட்டு வரணுமாம் ....போய் அரிசி -ஐ மென்னு துன்னு !!"

"இந்த பைப்ல தண்ணி வரலை என்னன்னு பாருங்க "


"ஏன்மா உயிர எடுக்கற ...இதல்லாம் நீ பார்க்கககூடாதா ?? நான் ரொம்ப பிசி !!"...

இப்படியே போய்க்கிட்டு இருந்துச்சி தினமும் .......
இப்ப 15 நாளா.......
பைப் ...சரி செய்தாச்சி....!!!
மில்-லில் எல்லாம் அரைத்தாச்சி!!!
உடம்பு நல்லா இருந்தாலும் டிபன் வாங்கி கொடுத்து .......
OVER TANK CLEAN பண்ணியாச்சி .......
பசங்களுக்கு பாடம் சொல்லி தந்தாச்சி....


இன்னும் என்னன்ன வேலை இருக்கோ அதை எல்லாம் கேக்காமலே
செய்து ரொம்ப ரொம்ப நல்ல பேர் எடுத்தேனே......!!!!

                         


இப்ப சொல்லுங்க "என்ன சுகம் ....
இந்த சுகம்???"---தானே?  


அப்புறம் என்ன.... உங்க ஜனநாயக கடமை -ஐ (COMMENT&VOTE) நீங்க கண்டிப்பா செய்வீங்கன்னு எனக்கு தெரியும்......


   

31 comments:

காட்டான் said...

ஹா ஹா ஹா இதுதான்யா எங்கள் வீட்டிலும் இப்ப..!!!!!மனிசி கொம்பீற்றர தூக்கி அடிக்க முன்னமே நான் உசாராகிறேன்யா... !!!!! தமிழ் மணம் குத்தீட்டேன்யா..

நாய் நக்ஸ் said...

@ காட்டான்/////
நன்றி !!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்ப அம்மணிக்கிட்டே நான் ரகசியமா ஒரு லட்டர் ஒன்று போட போறேன்...

”வீட்டு வேலையை ஒழுங்கா செய்யனுமா உடனே நெட் லைனை கட் பண்ணுங்க”


அப்படின்னு....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வீட்டுக்கு வேலை செய்யறது ஒரு சுகம் தானே...


கண்டிப்பாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதை செய்யுங்க தல...

நாய் நக்ஸ் said...

நன்றி @ # கவிதை வீதி # சௌந்தர் ///

நாய் நக்ஸ் said...

அன்பர்களே மாலை வந்து பதில் கமெண்ட் போடுறேன் ....

செங்கோவி said...

கலக்கல்...இப்போ என்ன சொல்ல வர்றீங்க?

வேற வேலையே இல்லைன்னா மட்டும் ப்லாக் பக்கம் வாங்கன்னு சொல்றீங்களா?

சசிகுமார் said...

ஹா ஹா

MANO நாஞ்சில் மனோ said...

அன்பர்களே !!!
கடந்த 15 நாட்களாக என் கம்ப்யூட்டர்-க்கு மறை கழன்று விட்டதால் பதிவு போடமுடியவில்லை ..//

நல்லவேளை உங்களுக்கு மறை கழண்டு போகாம இருந்துச்சே ஹி ஹி....

Mathuran said...

ஹா ஹா.. நல்ல பிளாஷ்பேக் தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லாவே டெவலப் ஆகிட்டாருய்யா....

பரிசல்காரன் said...

:-))

rajamelaiyur said...

Welcome back boss

rajamelaiyur said...

Wife adijatha marichetenkalay?

கோகுல் said...

அப்போ இனிமே பதினைஞ்சு நாள் வீட்டு வேலை முடிச்சுட்டு மீதி நாள் வலைப்பக்கம் வருவீங்க

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா...ஹா... வீட்டு வேலை செய்யனும்னா கணினி ரிப்பேர் ஆகணுமா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஒட்டு பட்டை ஒண்ணுமே இல்லையே?

நாய் நக்ஸ் said...

செங்கோவி said...
கலக்கல்...இப்போ என்ன சொல்ல வர்றீங்க?

வேற வேலையே இல்லைன்னா மட்டும் ப்லாக் பக்கம் வாங்கன்னு சொல்றீங்களா?/////

இல்லை ப்ளாக் வேலை-ஐ முடிச்சிட்டு
மற்ற வேலை -ஐ பாருங்க என்று சொன்னேன்

நாய் நக்ஸ் said...

சசிகுமார் said...//
MANO நாஞ்சில் மனோ////
மதுரன் said...///
பரிசல்காரன் said...///
"என் ராஜபாட்டை"- ராஜா said...////
கோகுல் said...///
தமிழ்வாசி - Prakash said...///

நன்றி!!!!

நாய் நக்ஸ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்லாவே டெவலப் ஆகிட்டாருய்யா....////

குருவே சரணம் !!!

ரைட்டர் நட்சத்திரா said...

உங்களுக்கு நல்ல வேலைங்கோ

ADMIN said...

அங்கனயும் இப்படித்தானா?

வைகை said...

அண்ணே.. இன்னும் சரியாகலைனா எங்க வீட்லயும் பைப் வேலை செய்யல கொஞ்சம் நீங்க வந்து :))

கவிதை பூக்கள் பாலா said...

உண்மை தான் அடிமை ஆயிட்டீங்கன்னா அவ்வளவே .............
வேளை செய்ய மாட்டீங்க , கொஞ்சம் தெளியனும் அவ்வளவே தான் !

நாய் நக்ஸ் said...

கார்த்தி கேயனி said...///
வைகை said...///
bala said...////

நன்றி!!!

நாய் நக்ஸ் said...

வைகை said...
அண்ணே.. இன்னும் சரியாகலைனா எங்க வீட்லயும் பைப் வேலை செய்யல கொஞ்சம் நீங்க வந்து :))//////

முகவரி ப்ளீஸ்???

Philosophy Prabhakaran said...

வீட்டுல போய் பிரபல பதிவர்ன்னு சொல்லிப்பாருங்க... சோறு போடுறாங்களான்னு பார்ப்போம்...

K said...

என்னது கம்பியூட்டருக்கு மறை கழன்றுவிட்டதா? ஹா ஹா ஹா மிகவும் ரசித்த வரிகள்!

K said...

என்னது கம்பியூட்டருக்கு மறை கழன்றுவிட்டதா? ஹா ஹா ஹா மிகவும் ரசித்த வரிகள்!

நாய் நக்ஸ் said...

Philosophy Prabhakaran said...
வீட்டுல போய் பிரபல பதிவர்ன்னு சொல்லிப்பாருங்க... சோறு போடுறாங்களான்னு பார்ப்போம்...////

என்னே எதோ சோறு கிடைகிறது ....
அதுவும் போகனுமா ????

நாய் நக்ஸ் said...

Powder Star - Dr. ஐடியாமணி said...
என்னது கம்பியூட்டருக்கு மறை கழன்றுவிட்டதா? ஹா ஹா ஹா மிகவும் ரசித்த வரிகள்!/////

நன்றி !!!