Pages

Monday, July 29, 2013

டீன் ஏஜ்ல் இருந்தவர்(இருப்பவர்)களின் இனிமையான காதல் சினிமா அனுபவம்...(தொடர் பதிவு)

வணக்கம் அன்பர்களே....!!!


எப்போதும் புத்துயிர்ப்புடன் கலை கட்டி இருந்த பதிவுலகம் கலை இழந்து பல மாதங்கள் ஆயிடுச்சி....தற்சமயம்  பதிவுலகம் மீண்டும் எழுச்சி பெற தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது...தொடர் பதிவு,,காதல் கடித போட்டி என்று.....பின்னே நானே இந்த மாதத்துக்கு நாலாவது பதிவு போடுறேனே...பின்ன பார்த்துக்கோங்க....

நம்ம அருவா மனோ வேற என்னை தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருந்தார்...நான் அப்புறமா எழுதுறேன் என்று சொல்லி உள்ளேன்....கடந்த சில நாட்களாக பதிவுலகத்தில் எங்கு திரும்பினாலும் முதல் கணிணி அனுபவ பதிவாகவே இருக்கு...இது கொஞ்சம் போர் அடிப்பது போல தோன்றுகிறது...(எனக்கு).....

கும்மி குருப் பதிவு போடலைன்னு வருத்த படாதீங்க மக்களே...HUNT FOR HINT...ஆரம்பிக்கும்போது அனைவரும் பதிவா போட்டு தள்ளுவார்கள்...!!!

சரி இந்த பதிவுலக ""எழுச்சியை"" அப்படியே எழுச்சியோடு இருக்க வைக்க
இதோ அடுத்த தொடர் பதிவுக்கான தலைப்பு...நான் எல்லாம் கூப்பிட்டா யார் வந்து எழுத போறீங்க??? இருந்தாலும் ஒரு முயற்சி...பதிவுலக நட்புக்களே
கை கொடுங்கள்...எழுச்சியாக மின்னுவோம்...!!!சரி பதிவுக்கு போவோமா...


டீன் ஏஜ்-ஐ கடந்தவர்கள் அனைவருக்குமே அந்தந்த கால கட்டத்தில் நிச்சயம் ஏதாவது ஒரு காதல் சினிமா கண்டிப்பாக வெறி கொண்டு பிடித்திருக்கும்.....
அப்படி எனக்கு பிடித்த படம்தான் இதயத்தை திருடாதே....

இந்த படம் 1989-ல் கீதாஞ்சலி என்று தெலுங்கில் வெளியாகி சக்க போடு போட்டது...அதையே மணிரத்தினம் தமிழுக்காக வீ.கே.ராமசாமி,,ஜனகராஜ்
இவர்களை வைத்து காமெடி ட்ராக் மட்டும் எடுத்து இணைத்து தமிழில் டப்
பண்ணி வெளிட்டார்...படம் சூப்பர் டுப்பர் ஹிட்...

நாகார்ஜுன்,,கிரிஜா இவர்களின் நடிப்பில் அன்றைய காலகட்ட பதின்ம வயதினரை கட்டி போட்டபடம்...இந்த படத்தை பார்த்த அந்தந்த பாலினத்தார்
நாகார்ஜுன்,,கிரிஜாவாகவே தங்களை நினைத்துக்கொண்டனர் .....                             

     
படத்தில் நடித்த நாகார்ஜுன்,,கிரிஜாவின் குறும்புகள்,,காதலில் விழுந்த பிறகு வந்த எழுச்சி மிகு உணர்ச்சிகள்....அடடா சொல்ல,,விவரிக்க வார்த்தைகளே இல்லை...அதுக்கு தகுந்த மாதிரி காமெடி டிராக் வேற...

இளைய ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த படத்துக்கு மிக பெரிய பலம்...ஒளிப்பதிவு...ஸ்ரீராம்....சான்சே இல்லை...ஊட்டி,,கொடைக்கானல்-ஐ
அன்றைய காலகட்டத்தில் யாருமே இப்படி காட்டியதில்லை...
                                         


இந்த படத்தை பார்த்த இளைஞனும்,இளைஞகியும்...ஊட்டியிலேயே வாழ்வதாக கற்பனை பண்ணிகொண்டார்கள்...படத்தில் இருவருக்குமே வாயில் நுழைய முடியாத நோய் இருப்பது தெரிந்ததும்...தாங்களும் அந்த நோயிலேயே வாழ்த்தார்கள்...



இந்த மாதிரியான பாசமான குடும்பம் நமக்கு கிடைக்காதா என்று ஏங்க வைத்திருப்பார் மணி....படத்தின் ஒவ்வொரு காட்சியும்,,பிரேமும்....நம்மை அப்படியே உள்வாங்கிகொள்ளும்...படத்தில் வெயிலையே காட்டாமல்...முழுக்க முழுக்க பனி மூட்டத்தில் எடுத்திருப்பார் ரத்தினம்...

                                         


போதும்...படத்தை பார்க்காதவர்கள்...YOU TUBE அல்லது வேறு எங்கையாவது
தேடி பார்த்துக்குங்க....நாம மத்ததை பத்தி பேசுவோம்...

                             


இந்த படத்தை நான் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை...படம் வெளியான சமயம்..நான் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன்...கல்லூரி மாணவர்கள் மொத்த பேரும்
தியேட்டரில்தான் குடி இருந்தோம்....(நோ...நோ...அந்த குடி இல்லை...இது காதல்..)

                         



இப்படி இந்த படத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் போதுதான் எங்கள் கல்லூரியில் ஒரு போட்டி வைத்தார்கள்...வினாடி வினா-இதயத்தை திருடாதே-----படத்தில் இருந்து.....நம்ம பசங்களுக்கு கேக்கவா வேணும்...
ங்கொய்யாலே....பசங்க யாருமே இல்லாம கல்லூரி மூணு நாள் நடக்கவே இல்லை...!!!!

                         


நாம மட்டும் என்ன...???என் தங்கமணியோட வீட்டார் சம்மதத்துடன் காதலித்துக்கொண்டிருந்த நேரம்...கியுஸ் நிகழ்ச்சில கலந்து வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று....ஒரு பெரிய நோட் எடுத்துக்கிட்டு போய்...உள்ள வேற வெளிச்சம் இருக்காதா ...கதவுக்கு பக்கமா இருந்துகொண்டு அதுல வர்ற சின்ன வெளிச்சத்துல குறிப்பு  எடுத்துகிட்டு...(பாடத்த கவனித்து குறிப்பு எடுத்திருந்தா...எங்கேயோ போய் இருப்பேன்.) கியுஸ் நிகழ்ச்சிக்கு போனா....
ஒரு 1000 பேருக்கு மேல வந்துட்டாணுக...உடனே இரண்டிரண்டு பேர்ஆ
சேர்ந்து பதில் சொல்லலாம் என்று சொல்லிட்டாங்க.....

                       



நானும் என் நண்பனும்...{அவனும் லவுஸ்....} சேர்ந்து பதில் சொன்னோம்...
கூட்டத்தை வடி கட்ட பல கட்ட தேர்வுகள்....பத்தாவது கட்ட தேர்வு வரை தொடர்ந்து வெற்றி பெற்று கால இறுதியில் நுழைந்து----இப்போது நாளே டீம்...

அதிலும் வெற்றி பெற்று அறை இறுதி...!!!! இது வரை கேட்ட அனைத்து கேள்விகளில் ஒரு சில கேள்விகள் தவிர அனைத்துக்கும் சரியான பதில்...சொல்லியாச்சி...

உ.ம்.----ஜிப்சியின் நம்பர்,,எத்தனை HEAD LIGHTS,,பார்க்கில் எந்தனை விளக்கு கம்பங்கள் இருந்தன...ஹீரோவுக்கு எத்தனை நண்பர்கள்,,,இப்படி...

இறுதிபோட்டி...

ஹீரோயின் வீட்டில் அவளது ரூமில் எத்தனை கண்ணாடி ஜன்னல் இருக்கிறது...???அதையும் சொல்லியாச்சி...[சரியாக நினைவில்லை...தற்சமயம்..]  எத்தனை கண்ணாடியில் I LOVE YOU என்று எழுதி இருக்கும் ??? இந்த கேள்வில சொதப்பிட்டோம்...பரிசு போச்சி...
இரண்டாவதா வந்த தால எங்கள் இருவருக்கும்...50 ருபாய் பரிசு....

ம்ம்ம்ம்ம்ம்.....அது ஒரு கால கட்டம்...கல்லூரி வாழ்க்கை...காதல்...சினிமா...


அன்பர்களே.... நீங்களும் உங்களின் டீன் ஏஜ்-ல் இனிமையான காதல் சினிமா அனுபவத்தை தொடருங்களேன்....

இந்த பதிவை தொடர நான் அனைத்து பதிவுலக நண்பர்கள்,,சொந்தங்களை அழைக்கிறேன்....குறிப்பிட்டு சிலரை சொல்ல விரும்பவில்லை...
இது அனைவருக்குமான அழைப்பு...!!!!நீங்களும் மற்றவர்களை அழையுங்கள்....


இந்த அழைப்பு  உங்களுக்கு எப்படி இருக்குன்னா....இதோ இந்த  படம்  மாதிரி....!!!!!!!!!!!!!!!!!















































































                                                 


ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....!!!!!!!!!!!!!!!


பஞ்ச் வச்சோம்ல ........!!!!!!!!!!




நண்பர்களே.... கொஞ்சம் சிரமம் பார்க்காமல் திரட்டிகளில் இணைத்துவிடவும்.....நன்றி....!!!!

40 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே என்ன இது அண்ணே....ஹி ஹி...

cheena (சீனா) said...

அன்பின் நக்ஸ் - 1989ல் வந்த படம் பத்தி இன்னிக்கு எழுதறீங்களா - இத்தனை வருசம் மனசிலேயே வச்சு டெய்லி மனசிலேயே போட்டுப் பாத்து மகிழ்ந்தீக்களாக்கும் - பரவால்ல - நலலாருக்கு - 50 ரூபா ரெண்டு பேருக்கும் சேத்தா - தனித் தனியாவா - நல்வாழ்த்துகல் நக்ஸ் - நட்புடன் சீனா

நாய் நக்ஸ் said...

MANO நாஞ்சில் மனோ said...
அண்ணே என்ன இது அண்ணே....ஹி ஹி.../////////////


அதாண்ணே இது....

நாய் நக்ஸ் said...

Blogger cheena (சீனா) said...
அன்பின் நக்ஸ் - 1989ல் வந்த படம் பத்தி இன்னிக்கு எழுதறீங்களா - இத்தனை வருசம் மனசிலேயே வச்சு டெய்லி மனசிலேயே போட்டுப் பாத்து மகிழ்ந்தீக்களாக்கும் - பரவால்ல - நலலாருக்கு - 50 ரூபா ரெண்டு பேருக்கும் சேத்தா - தனித் தனியாவா - நல்வாழ்த்துகல் நக்ஸ் - நட்புடன் சீனா///////////////////



50 RS....இருவருக்கும் சேர்த்துதான் ஐயா....நன்றி...

sathishsangkavi.blogspot.com said...

// .இந்த படத்தை பார்த்த அந்தந்த பாலினத்தார்
நாகார்ஜுன்,,கிரிஜாவாகவே தங்களை நினைத்துக்கொண்டனர் .... //

அப்ப நாகார்ஜுனா கொஞ்ச நாள் வலம் வந்து இருக்கீங்க... மாம்ஸ் தொடர் பதிவில் கலக்கிடுவோம்...

நாய் நக்ஸ் said...

Blogger சங்கவி said...
// .இந்த படத்தை பார்த்த அந்தந்த பாலினத்தார்
நாகார்ஜுன்,,கிரிஜாவாகவே தங்களை நினைத்துக்கொண்டனர் .... //

அப்ப நாகார்ஜுனா கொஞ்ச நாள் வலம் வந்து இருக்கீங்க... மாம்ஸ் தொடர் பதிவில் கலக்கிடுவோம்...////////////////

நன்றி சதீஷ்....ஆமா பாஸ்...படம் பாக்கும்போதேல்லாம் அப்படிதான் நினைப்பு....!!!...தொடருங்கள்...

Manimaran said...


உண்மையிலேயே காதலில் கசிந்துருக செய்த படம்... படத்தின் அழுத்தமான காட்சிகளுக்கு ராகதேவனின் பின்னணி இன்னும் உயிர் கொடுத்திருக்கும்.

தங்கமணி டயலாக் இந்த படத்தில்தான...!

நாய் நக்ஸ் said...

Blogger Manimaran said...

உண்மையிலேயே காதலில் கசிந்துருக செய்த படம்... படத்தின் அழுத்தமான காட்சிகளுக்கு ராகதேவனின் பின்னணி இன்னும் உயிர் கொடுத்திருக்கும்.

தங்கமணி டயலாக் இந்த படத்தில்தான...!//////////////


ஆமாம்,,,சார்,,,நல்ல படம்...இன்னுமும் மனசுல நிக்குது....

திண்டுக்கல் தனபாலன் said...

மறக்க முடியாத பாடல்கள் உள்ள படம்... தொடர் பதிவு தானே...? தொடர்ந்திடுவோம்... ஏற்கனவே உள்ள "கணினி முதல் அனுபவம்" முடித்து விட்டு...!

ஓ பாபா லாலி...
கண்மணி லாலி...
பொன்மணி லாலி...
பாடினேன் கேளடி...

ஓ ப்ரியா ப்ரியா...
என் ப்ரியா ப்ரியா...
ஏழை காதல் வாழுமோ...?
இருளும் ஒளியும் சேருமோ...?
நீயோர் ஓரம் நானோர் ஓரம்...
கானல் நீரால் தாகம் தீராது...!

நாய் நக்ஸ் said...

Blogger திண்டுக்கல் தனபாலன் said...
மறக்க முடியாத பாடல்கள் உள்ள படம்... தொடர் பதிவு தானே...? தொடர்ந்திடுவோம்... ஏற்கனவே உள்ள "கணினி முதல் அனுபவம்" முடித்து விட்டு...!//////////////


நன்றி தனபாலன்...தொடருங்கள்....பாடல்கள் அனைத்துமே சூப்பர் டுப்பர் ஹிட்....

நாய் நக்ஸ் said...

நண்பர்களே...நண்பனுக்காக அவசரமா....மருத்துவமனை செல்கிறேன்... இரவு வந்து பதில்+கும்மி தொடருகிறேன்...

மெயில் டிக் அடிச்சிட்டு போங்க....

JR Benedict II said...

சூப்பர் அண்ணா.. இந்த தொடர் பதிவு எல்லாரையும் என்டர்டென் பண்ணும் என்று நினைக்கிறேன்..

நாய் நக்ஸ் said...

ஹாரி R. said...
சூப்பர் அண்ணா.. இந்த தொடர் பதிவு எல்லாரையும் என்டர்டென் பண்ணும் என்று நினைக்கிறேன்..//////////////

நன்றி ஹாரி...அந்த நினைப்புலதான்...பதிவு போட்டிருக்கேன்....

Unknown said...

நான் இனிமே தான் இந்த படத்த பார்க்கணும்

நாய் நக்ஸ் said...

Blogger சக்கர கட்டி said...
நான் இனிமே தான் இந்த படத்த பார்க்கணும்////////////

அவசியம் பாருங்க....உருகிடுவீங்க....!!!

”தளிர் சுரேஷ்” said...

அனைவரையும் கவர்ந்த படம் இதயத்தை திருடாதே! சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி! நான் சினிமா அவ்வளவா பார்க்காத ஆளு! பார்ப்போம்! நன்றி!

தமிழ்வாசி பிரகாஷ் said...

நக்ஸ்...

இந்த படம் இதுவரையிலும் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை...

என்ன தொடர்பதிவா? தொடரனுமா???

நீங்க யாருன்னு தெரியலையே??

செங்கோவி said...

அட..இது நல்ல டாபிக்கா இருக்கே!......முயற்சிக்கிறேன் நக்கீரரே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் இது டீன் ஏஜ் லவ்வா? காலேஜ் 3 இயர்னா எப்படியும் 21 வயசாவது ஆகி இருக்குமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இந்த பதிவை தொடர நான் அனைத்து பதிவுலக நண்பர்கள்,,சொந்தங்களை அழைக்கிறேன்....குறிப்பிட்டு சிலரை சொல்ல விரும்பவில்லை...
இது அனைவருக்குமான அழைப்பு...!!!!நீங்களும் மற்றவர்களை அழையுங்கள்....//////

ஆமா நானும் மத்தவங்கள அழைக்கிறேன்... எல்லாரும் தொடருங்க. போதுமா நக்சு....? (மத்தவங்களை அழைக்க சொல்லி இருக்கீங்க அதானே?)

கார்த்திக் சரவணன் said...

இந்தப்படம் வந்தபோது நான் ஆறாவதோ ஏழாவதோ படித்துக்கொண்டிருந்தேன் என்பது மட்டுமே ஞாபகம் இருக்கிறது... இன்னும் படம் பார்க்கவில்லை....

நாய் நக்ஸ் said...

Blogger s suresh said...
அனைவரையும் கவர்ந்த படம் இதயத்தை திருடாதே! சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி! நான் சினிமா அவ்வளவா பார்க்காத ஆளு! பார்ப்போம்! நன்றி!/////


இந்த படம் பார்த்தபின் தொடர்ந்து படம் பாப்பீங்க...

நாய் நக்ஸ் said...

Blogger தமிழ்வாசி பிரகாஷ் said...
நக்ஸ்...

இந்த படம் இதுவரையிலும் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை...

என்ன தொடர்பதிவா? தொடரனுமா???

நீங்க யாருன்னு தெரியலையே??///////////////


அவசியம் பாருங்க....உருகிடுவீங்க....!!!

இப்ப தெரிஞ்சிக்குங்க...இல்லாட்டி இன்னும் சிவாஜி படம் போடுவேன்....

நாய் நக்ஸ் said...

செங்கோவி said...
அட..இது நல்ல டாபிக்கா இருக்கே!......முயற்சிக்கிறேன் நக்கீரரே!//////////////////

பிறவிபயன் அடைந்துவிட்டேன்.....நன்றி...!!!

நாய் நக்ஸ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் இது டீன் ஏஜ் லவ்வா? காலேஜ் 3 இயர்னா எப்படியும் 21 வயசாவது ஆகி இருக்குமே?///////////

பதிவ படிச்சி அனுபவச்சி புழங்காகிதம் அடையாம என்னையா ஆராய்ச்சி...????

நாய் நக்ஸ் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////இந்த பதிவை தொடர நான் அனைத்து பதிவுலக நண்பர்கள்,,சொந்தங்களை அழைக்கிறேன்....குறிப்பிட்டு சிலரை சொல்ல விரும்பவில்லை...
இது அனைவருக்குமான அழைப்பு...!!!!நீங்களும் மற்றவர்களை அழையுங்கள்....//////

ஆமா நானும் மத்தவங்கள அழைக்கிறேன்... எல்லாரும் தொடருங்க. போதுமா நக்சு....? (மத்தவங்களை அழைக்க சொல்லி இருக்கீங்க அதானே?)///////////////////////


பன்னி...இம்ம்புட்டு அப்பாவி,,,சின்ன குழந்தையா நீர்...போய் பதிவ தொடரும்...தப்பிக்க நினைக்க வேண்டாம்...அப்புறம் ஏற்ப்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல...சொல்லிட்டேன்...

நாய் நக்ஸ் said...

Blogger ஸ்கூல் பையன் said...
இந்தப்படம் வந்தபோது நான் ஆறாவதோ ஏழாவதோ படித்துக்கொண்டிருந்தேன் என்பது மட்டுமே ஞாபகம் இருக்கிறது... இன்னும் படம் பார்க்கவில்லை...///////////

உங்க age-ல் வந்த படத்தை பகிருங்கள்...நன்றி,,,,

நாய் நக்ஸ் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் இது டீன் ஏஜ் லவ்வா? காலேஜ் 3 இயர்னா எப்படியும் 21 வயசாவது ஆகி இருக்குமே?/////////////

பன்னி தன்னுடைய வயச ஒத்துக்கிட்டார்....

@பன்னி...கொஞ்சம் நினைவு சக்தி பிளாக்கர் ஆனவுடன் குறைய ஆரம்பிச்சிடுச்சி...!!!! எல்லா புகழும் குருவுக்கே....

TERROR-PANDIYAN(VAS) said...

//ஆமா நானும் மத்தவங்கள அழைக்கிறேன்... எல்லாரும் தொடருங்க. போதுமா நக்சு....? (மத்தவங்களை அழைக்க சொல்லி இருக்கீங்க அதானே?) //


நானும் வழி மொழிகிறேன்.. :)

நாமக்கல் சிபி said...

காதல்....!

காதல்!

இதைப் பத்தி எவ்வளவு வேணா எழுதிகிட்டே இருக்கலாமே!

கிவ் மீ ஒன் வீக்ஸ் டைம்!

நெக்ஸ்ட் சண்டே மீட் பண்ணுறேன்!

ராஜ் said...

ரொம்ப சுவாரசியமா எழுதி இருக்கீங்க. இந்த படம் வரும் போது, எனக்கு அப்ப ரொம்ப சின்ன வயசு, 2~3 ஆம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்தேன்னு ஞாபகம். அந்த வயசுல சண்டைகாட்சி இருக்கிற படம் மட்டும் தான் எனக்கு பிடிக்கும், இந்த படம் அப்ப எனக்கு சுத்தமா பிடிக்கல, படத்துல சண்டையே இல்லைன்னு நினைக்கிறன். வளர்ந்த அப்புறமா ஒரு வாட்டி ராஜ் டிவியில் படத்தை பார்த்து ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகிட்டேன், கிளாச்சிக் லவ் ஸ்டோரி.

உணவு உலகம் said...

ஃபுல் ஃபார்முக்கு வந்துட்டீங்க போல! ஹா ஹா ஹா

உணவு உலகம் said...

நக்ஸ் ராக்ஸ்.

வெளங்காதவன்™ said...

லாலாலலலலலலாலா

நாய் நக்ஸ் said...

TERROR-PANDIYAN(VAS) said...
//ஆமா நானும் மத்தவங்கள அழைக்கிறேன்... எல்லாரும் தொடருங்க. போதுமா நக்சு....? (மத்தவங்களை அழைக்க சொல்லி இருக்கீங்க அதானே?) //


நானும் வழி மொழிகிறேன்.. :)///////////

தூப்பியாசில்ல....வாயை தொடைச்சிக்கிட்டு போகவும்....!!!

நாய் நக்ஸ் said...

நாமக்கல் சிபி said...
காதல்....!

காதல்!

இதைப் பத்தி எவ்வளவு வேணா எழுதிகிட்டே இருக்கலாமே!

கிவ் மீ ஒன் வீக்ஸ் டைம்!

நெக்ஸ்ட் சண்டே மீட் பண்ணுறேன்!////////////

வாங்க...தல...அவசியம் எழுதுங்க...காத்திருக்கோம்...

நாய் நக்ஸ் said...

Blogger ராஜ் said...
ரொம்ப சுவாரசியமா எழுதி இருக்கீங்க. இந்த படம் வரும் போது, எனக்கு அப்ப ரொம்ப சின்ன வயசு, 2~3 ஆம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்தேன்னு ஞாபகம். அந்த வயசுல சண்டைகாட்சி இருக்கிற படம் மட்டும் தான் எனக்கு பிடிக்கும், இந்த படம் அப்ப எனக்கு சுத்தமா பிடிக்கல, படத்துல சண்டையே இல்லைன்னு நினைக்கிறன். வளர்ந்த அப்புறமா ஒரு வாட்டி ராஜ் டிவியில் படத்தை பார்த்து ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகிட்டேன், கிளாச்சிக் லவ் ஸ்டோரி.//////////////


ஆமாம்...ராஜ்....நீங்களும் எழுதுங்க.....

நாய் நக்ஸ் said...

Blogger FOOD NELLAI said...
ஃபுல் ஃபார்முக்கு வந்துட்டீங்க போல! ஹா ஹா ஹா//////

Blogger FOOD NELLAI said...
நக்ஸ் ராக்ஸ்.//////////////


நன்றி ஆபீசர்.....

நாய் நக்ஸ் said...

Blogger வெளங்காதவன்™ said...
லாலாலலலலலலாலா/////////////////

யோவ்வ்வ்வ்வ்வ்.....இன்னுமாயா உன் ஸ்பாம் பிரச்சனை தீரலை....

பள்ளத்துல விழுந்துடபோற....கவனமா பார்த்து போகவும்....

MADURAI NETBIRD said...

// .இந்த படத்தை பார்த்த அந்தந்த பாலினத்தார்
நாகார்ஜுன்,,கிரிஜாவாகவே தங்களை நினைத்துக்கொண்டனர் .... //

அனைவரையும் கவர்ந்த படம் இதயத்தை திருடாதே! சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி!

அப்ப நீங்க நாகார்ஜுன்!!!!!!!!!!!!!!!!!