Pages

Wednesday, November 28, 2012

மீன்பாடி வண்டி தோழி.....!!!

வணக்கம் அன்பர்களே....

மிக கடுமையான மின்வெட்டு,,பல்கலைகழக வேலை நிச்சயமின்மை ...
இப்படி பட்ட சுழலில் அனைவரின் பதிவை படிப்பது.....
மின்சாரம் இருந்தால் ...பின்னுட்டம் இடுவது என்று இருந்தேன்...
என் ப்ளாக்-ஐ ஓபன் செய்வதே இல்லை...

நம்ம நண்பர்களும் நீ பதிவே போடவேண்டாம்...சும்மா இருந்தால் போதும்...
என்று மிகபணிவாக கேட்டுக்கொண்டதால்....நானும் அமைதி காத்தேன்....

ஆனா பாருங்க நம்ம பிலாசபி பிரபா இன்னிக்கு ஒரு கவிதை பதிவு
போட்டாரு.....சரி போய் கமெண்ட் போடுவோம்னு மீண்டும் அந்த கவிதையை
படிச்ச உடனே.....

எனக்குள்ள இருக்குற கவிஞன் முழிச்சிக்கிட்டான்.....
பொங்குச்சி பாருங்க கவிதை....
நீங்களும் அனுபவிங்க....அந்த பரவச உணர்வை.....

அதுக்கு முன்னாடி இந்த கவிதையை ஒருவாட்டி படிச்சிடுங்க......
அப்பத்தான் நம்ம கவிதையோட முழு வீரியமும் புரியும்.....

சரி கவிதைக்கு???!!!!?????? போவோமா....???.......





                                      மீன்பாடி வண்டி தோழி.....!!!






உனக்கான பத்து காசு  இல்லாததால் இறக்கி விட்ட பிறகு 
மீன்பாடி  வண்டி வேகமாக செல்கிறது.......


நீ அமர்ந்த ஜன்னலோர இருக்கையில் பான்பராக் துப்பிவிட்டதால் 
வாந்தி வந்துவிட்டதாம் #மசக்கை....

மழை நாட்களில் வேண்டுமென்றே
வெள்ளை வெளிஆடை,,கருப்பு உள்ளாடை அணிகிறேன்....

மஜாக்கள் ஜாக்கிரதை
என்றுதானே எழுதியிருக்க வேண்டும்....

பிடித்தது - நீ என் கையை.......
பறிபோனது என் மோதிரம்.....

வேகத்தடைகளில் வண்டி ஸ்கிட் ஆகிறது....

மீன்பாடி பயணிகளின் டப்பாங்குத்து கூட
உன்னிருப்பில் பாக்கியராஜ்,ராமராஜன் ஸ்டைல் தானே....

உன்னெதிரில் வாய்தவறி வந்த கெட்டவார்த்தையை
உங்கப்பனை  திட்ட பயன்படுத்திக்கொண்டேன்.....

பறவை முனியம்மா அப்படியொன்றும் அழகில்லை....

அந்த லாங் சைஸ் சுருட்டுக்கு மட்டும் எங்கும் 
இப்படி ஒரு நாற்றம் கிடையாது........

கூவத்தை ரசித்துக்கொண்டிருந்த உன்னை 
கூவமே கூவத்தை ரசிக்கிறதே என்றேன்....

உன்வீடும்,என்வீடும் பல 
கண்டங்கள் தள்ளி இருந்திருக்கலாம்....



பிரபா!!! ஒண்ணும் சொல்லுவதற்கில்லை....

நன்றி.......படங்கள்  கூகிள் இமேஜஸ்...

   
                                    

24 comments:

Anonymous said...

நக்கீரன் கவிதைகள் ஒரு ஆங்கில எழுச்சி
சிதம்பரத்தில் உதித்த இணைய புரட்சி
அவரு வாங்கி வந்த கருவாடு ஒரே கவுச்சி
வாங்கி வச்ச சரக்கு எங்கய்யா போச்சி
ஏ டண்டணக்கா, டணக்குணக்கா

நாய் நக்ஸ் said...

ஆஹா...ஆஹா....வாரும் கவிஞ்கரே.....

Anonymous said...

அம்மிணி ஏறி வந்ததோ மீன்பாடி
நக்கீரனுக்கு கோவம் வந்து அடிச்சா நீ டெட்பாடி
பேண்ட்டுக்குள்ள போடுவாரு பட்டாபட்டி
அவரது ஆங்கில கவிதைகள் ஒரு அட்ராசிட்டி

நாய் நக்ஸ் said...

செந்திலுகாரு...
வவ்வாலை இட்டுகிட்டு வாரும்....

Unknown said...

கவிதை கவிதை
இனி ஒலம் அழிஞ்சிரும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மொழிக்கூறுகளின் ஆளுமையை கட்டமைக்கும் பின்நவீன செழுமைகளின் மாட்சிமையை உள்வாங்கியபடி சமகாலத்திய சமூக சூழல்களின் மீது எஞ்சி நிற்கும் தொன்மையான படிமங்களின் நீட்சியின் அவதானிப்புடன் நானும் ஒரு கவிதையை சமைக்கலாம் என்று அனுமானித்திருக்கிறேன்.......

Unknown said...

நக்கீரா நன்றாக பார்.....!

உனக்கு இது தேவையா...?

நாய் நக்ஸ் said...

@ வீடு....
எப்படி அதுக்குள்ளே....இன்னும் எவ்வளவு காவியம் படைக்க வேண்டி இருக்கு...

நாய் நக்ஸ் said...

மொழிக்கூறுகளின் ஆளுமையை கட்டமைக்கும் பின்நவீன செழுமைகளின் மாட்சிமையை உள்வாங்கியபடி சமகாலத்திய சமூக சூழல்களின் மீது எஞ்சி நிற்கும் தொன்மையான படிமங்களின் நீட்சியின் அவதானிப்புடன் நானும் ஒரு கவிதையை சமைக்கலாம் என்று அனுமானித்திருக்கிறேன்.......///////////

உப்பு,,புளி காரம்,,,கரம மசாலா அனைத்தும் சரியான விதத்தில் இருக்கட்டும்...ஆமா...

Unknown said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
மொழிக்கூறுகளின் ஆளுமையை கட்டமைக்கும் பின்நவீன செழுமைகளின் மாட்சிமையை உள்வாங்கியபடி சமகாலத்திய சமூக சூழல்களின் மீது எஞ்சி நிற்கும் தொன்மையான படிமங்களின் நீட்சியின் அவதானிப்புடன் நானும் ஒரு கவிதையை சமைக்கலாம் என்று அனுமானித்திருக்கிறேன்.......
/////////////////////////
ந்னா...!என்னமோ சொல்றீங்கன்னு தெரியுது ஆனா காதுக்குள்ள குய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு ஒரு சவுண்ட்டு மட்டும்தாண்ணா கேட்குது!

நாய் நக்ஸ் said...

வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
மொழிக்கூறுகளின் ஆளுமையை கட்டமைக்கும் பின்நவீன செழுமைகளின் மாட்சிமையை உள்வாங்கியபடி சமகாலத்திய சமூக சூழல்களின் மீது எஞ்சி நிற்கும் தொன்மையான படிமங்களின் நீட்சியின் அவதானிப்புடன் நானும் ஒரு கவிதையை சமைக்கலாம் என்று அனுமானித்திருக்கிறேன்.......
/////////////////////////
ந்னா...!என்னமோ சொல்றீங்கன்னு தெரியுது ஆனா காதுக்குள்ள குய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு ஒரு சவுண்ட்டு மட்டும்தாண்ணா கேட்குது!///////////////////

போய் ஈபில் டவர்-ஐ வச்சி காது குடையும்...

Unknown said...

உன்னெதிரில் வாய்தவறி வந்த கெட்டவார்த்தையை
உங்கப்பனை திட்ட பயன்படுத்திக்கொண்டேன்.....
//////////////////////
ம.பு.பு.சி
(மண்ணுல புரண்டு புரண்டு சிரிச்சேன்..!

இப்படிக்கு
மோகன்குமார்

பட்டிகாட்டான் Jey said...

அருமை.

எழுத்துக்கள்கூட கோவத்தில் சிவந்திருப்பதன் குறியீடு என்னவென்று அறிந்துகொள்ளலாமா நக்கீரரே?!!!

நாய் நக்ஸ் said...

பட்டிகாட்டான் Jey said...
அருமை.

எழுத்துக்கள்கூட கோவத்தில் சிவந்திருப்பதன் குறியீடு என்னவென்று அறிந்துகொள்ளலாமா நக்கீரரே?!!!///////////////

எதிர் கவிதை எல்லாம் இந்த கலருலதான் போடணுமாம்....
நம்ம காப்டன் மாதிரி.........!!!!!!!

காட்டான் said...

ஆஹா.. அருமை..! அருமை..!!
அந்த நக்கீரனே நேரில் வந்தாலும் குற்றம் கண்டு பிடிக்கமுடியாத கவி நடை... உம்மைப்போல் இன்னும் ஒருவர் சீ சீ நீரே போதும் செந்தமிழ் தழைத்தோங்க.! நீவிர் வாழ்க நின்தமிழ் சேவை வளரட்டும்.!

நாய் நக்ஸ் said...

காட்டான் .....

ஆஹா.. அருமை..! அருமை..!!
அந்த நக்கீரனே நேரில் வந்தாலும் குற்றம் கண்டு பிடிக்கமுடியாத கவி நடை... உம்மைப்போல் இன்னும் ஒருவர் சீ சீ நீரே போதும் செந்தமிழ் தழைத்தோங்க.! நீவிர் வாழ்க நின்தமிழ் சேவை வளரட்டும்.! ///////////////

ம்ம்ம்ம் அப்படி வாழ்த்துங்க பாஸ்....

saidaiazeez.blogspot.in said...

அட அட...
கவித... கவித,..
அப்படியே பொங்குது!
இந்த பொங்கலுக்கு "முக்கிய" காரணமான ஃபிலாசஃபி பிரபாவுக்கு நன்றிங்கோ!
மேலும் இந்த பதிவால் பிரபலமாகிய googleக்கு வாழ்த்துங்கோ!

நாய் நக்ஸ் said...

சைதை அஜீஸ் said...
அட அட...
கவித... கவித,..
அப்படியே பொங்குது!
இந்த பொங்கலுக்கு "முக்கிய" காரணமான ஃபிலாசஃபி பிரபாவுக்கு நன்றிங்கோ!
மேலும் இந்த பதிவால் பிரபலமாகிய googleக்கு வாழ்த்துங்கோ!////////////////////


நன்றி அஜிஸ்....எதோ நம்மால முடிஞ்சது...கூகிள்-க்கு ஒரு இலவச சேவை....

CS. Mohan Kumar said...

செமையா சிரிச்சேன்பா

படங்களும், ராம்சாமி அண்ணனின் பின்னூட்டமும் டாப் கிளாஸ்

பிரபா கோச்சுக்காம இருக்கணும்; அவரோட நிஜ லவ்வை போய் கலாய்க்கிரீன்கலேய்யா

நாய் நக்ஸ் said...

மோகன் குமார் said...
செமையா சிரிச்சேன்பா

படங்களும், ராம்சாமி அண்ணனின் பின்னூட்டமும் டாப் கிளாஸ்

பிரபா கோச்சுக்காம இருக்கணும்; அவரோட நிஜ லவ்வை போய் கலாய்க்கிரீன்கலேய்யா////////////////

அவர் யாரு....??????????
மா.மா.மா.மா.மா....... மனிதர்....இது எல்லாம் ஜுஜுபி....

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல அல்ல.....அதியும் தாண்டி....
மிருகதனமானது....

சரியா பிரபா....???????

Philosophy Prabhakaran said...

நக்ஸ்... பதிவு செமையா இருக்கு... ஆனா யாரு எழுதினது...

மண்டபத்துல யாரோ எழுதிக்கொடுத்தா மாதிரி இருக்குது...

இந்த மாதிரி சப்பை மேட்டருக்கெல்லாம் நாங்க கோவிச்சுக்க மாட்டோம் மோகன் சார்... தவிர, காதலில் நிஜக்காதல் பொய்க்காதல் என்ன ? இன்னைக்கு எழுதின பதிவு என்னுடன் கம்ப்யூட்டர் கிளாஸில் படித்த தோழி பற்றியது... நீங்கள் நினைக்கும் அவரைப் பற்றியதல்ல...

அஞ்சா சிங்கம் said...

நக்கீரனின் கவிதைகளில் மட்டும் அல்ல அதற்காக அவர் பிரசுரம் பண்ணி இருக்கும் படத்திலும் ஒரு பயங்கரமான முதிர்ச்சி தெரிகிறது .

நாய் நக்ஸ் said...

Philosophy Prabhakaran said...
நக்ஸ்... பதிவு செமையா இருக்கு... ஆனா யாரு எழுதினது...

மண்டபத்துல யாரோ எழுதிக்கொடுத்தா மாதிரி இருக்குது...////////////////

தாங்கள் எழுதி வாங்கிய அதே மண்டபத்தில்தான் வாங்கினேன் மன்னா....!!!!!!!!!

Dino LA said...

பயனுள்ள தகவல்